Sports2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

-

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியும் ஒன்றாகும். ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கிண்ண கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.

கடைசியாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. 

மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது. 23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது. 

2026-ம் ஆண்டு ஜுன் 11-ம் திகதி முதல் ஜூலை 19-ம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை விட 16 நாடுகள் கூடுதலாக பங்கேற்கின்றன. 

கத்தார் உலக கிண்ணம் 32 அணிகள் பங்கேற்றன. உலக கிண்ணத்தில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலகக்கிண்ணத்தை விட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கிண்ணத்தில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...