Sports2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

-

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியும் ஒன்றாகும். ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கிண்ண கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.

கடைசியாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. 

மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது. 23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது. 

2026-ம் ஆண்டு ஜுன் 11-ம் திகதி முதல் ஜூலை 19-ம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை விட 16 நாடுகள் கூடுதலாக பங்கேற்கின்றன. 

கத்தார் உலக கிண்ணம் 32 அணிகள் பங்கேற்றன. உலக கிண்ணத்தில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலகக்கிண்ணத்தை விட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கிண்ணத்தில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...