Sports2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2026 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

-

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியும் ஒன்றாகும். ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கிண்ண கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.

கடைசியாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது. 

மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது. 23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது. 

2026-ம் ஆண்டு ஜுன் 11-ம் திகதி முதல் ஜூலை 19-ம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை விட 16 நாடுகள் கூடுதலாக பங்கேற்கின்றன. 

கத்தார் உலக கிண்ணம் 32 அணிகள் பங்கேற்றன. உலக கிண்ணத்தில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.

தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலகக்கிண்ணத்தை விட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கிண்ணத்தில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

ஈரானின் உச்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என எனக்கு தெரியும் – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அவரைக் கொலை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஒரே நாளில் 583 பேருடன் உடலுறவு கொண்ட பெண்ணின் கனவுகள் நனவாகின

ஒரே நாளில் 583 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் தனது கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். அவர் தனது கனவு இல்லத்திற்காக $600,000 செலவிட்டதாகக் கூறப்படுகிறது. Annie...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...

NSW-வில் விபத்துக்குள்ளான ஒரு இலகுரக விமானம்

நியூ சவுத் வேல்ஸில் நடந்த ஒரு இலகுரக விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து, மாநிலத்தில் உள்ள Parkes-இற்கு மேற்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவில்...

சமூக ஊடகங்களில் குற்றங்களை ஊக்குவித்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்!

சமூக ஊடகங்கள் மூலம் குற்றங்களைத் தூண்டும் நபர்களுக்கு எதிர்காலத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும். விக்டோரியா மாநிலம் இன்று நாடாளுமன்றத்தில் தொடர்புடைய முன்மொழிவை சமர்ப்பிக்கும். சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் செயலிகள்...

ரத்து செய்யப்பட்ட சந்திப்பு – அல்பானீஸிடம் சொல்லாமல் வெளியேறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இடையேயான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் முன்கூட்டியே வெளியேறுவார்...