Sportsஉலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளிய கிரிக்கெட் வீரர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளிய கிரிக்கெட் வீரர்

-

இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு கிரிக்கெட் நட்சத்திரமும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இது தவிர, விளம்பரங்கள் உள்ளிட்ட பிற வருமானங்களும் உள்ளன. 

கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், விளம்பர மதிப்புகளும் குவிந்து வருகின்றது. இதனால் அவர்களின் மதிப்பு பல நூறு கோடியை தாண்டி அதிகரித்து வருகின்றது. 

இப்படி இருக்கையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பணக்கார கிரிக்கெட் பட்டியல் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பட்டியலில் விராட் கோலி, தோனி போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் தான் எப்போதும் டாப்பில் இருப்பார்கள். 

இந்நிலையில் இந்த முறை கில் கிறிஸ்ட் என்கிற அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் பெயர் இடம்பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 3120 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ். தோனி அனைவரும் பணக்கார கிரிக்கெட் வீரர்கள். ஆனால் அவர்களில் யாரும் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் இல்லை.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் பணக்காரர்.

இதை உலகின் முன்னணி வணிக இதழான சிஇஓ வேர்ல்ட் மேகசின் வெளியிட்டு உள்ளது. கில்கிறிஸ்ட் வருவாய் சுமார் ரூ.3129.26 கோடி ($380 மில்லியன்). இந்தப் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரூ.1399.55 கோடிகள் ($170 மில்லியன்). ஆனால் ஆடம் கில்கிறிஸ்ட் என்ற பெயரிலேயே மற்றொரு தொழிலதிபர் ஒருவர் எப் 45 என்ற ஜிம்மை நடத்தி வருகிறார். 

அவரின் சொத்து மதிப்பு இதில் சேர்த்துள்ளதால் கணக்கு எடுப்பில் தவறு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து, இப்பட்டியலில் முதலிடம் பெற்றது ரூ.1400 கோடி சொத்துக்கள் கொண்ட சச்சின் டெண்டுல்கர் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் கில்கிறிஸ்ட். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் கோடிகளை சம்பாதிக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரூ.1000 கோடி ($115 மில்லியன்), நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரூ.920 கோடி ($112 மில்லியன்) முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாகவும் உள்ளனர்.

பத்து பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சேவாக் இடத்திலும் எட்டாவது ரூ.300 கோடி ($40 மில்லியன்), யுவராஜ் ஒன்பதாவது ($35 மில்லியன்) இடத்திலும் உள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

அல்பானீஸுக்கு இடம் கொடுக்காமல், ஆஸ்திரேலிய தலைவரை ரகசியமாக சந்திக்கிறார் டிரம்ப்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கான ஆஸ்திரேலிய தூதர் Kevin Rudd இடையேயான ரகசிய சந்திப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 11, 2025 அன்று புளோரிடாவில்...

டிரம்பின் சூப்பர்மேன் போஸ்டரை வெளியிட்ட வெள்ளை மாளிகை

"Superman" திரைப்படத்திற்கான போஸ்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூப்பர் ஹீரோவாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தில், டிரம்ப்புக்குப் பதிலாக David...

ஏலத்தில் விற்கப்பட்ட பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கைப்பை

Jane Birkin-இன் அசல் Hermès பை ஏலத்தில் $15.29 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடந்த Sotheby-இன் ஏலத்தில் ஒன்பது ஏலதாரர்கள் தொலைபேசி மூலமாகவும் நேரிலும் போட்டியிட்டனர். ஜப்பானைச் சேர்ந்த...

Crypto ATM மோசடியில் $2.5 மில்லியன் இழப்பு

முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட Crypto ATM மோசடியில் 15 பேர் 2.5 மில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மோசடியில் சிக்கிய ஒருவர் Crypto ATM-இல் இருந்து...

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக ஆஸ்திரேலியரை நியமித்த டிரம்ப்

மலேசியாவுக்கான அமெரிக்க தூதராக முன்னாள் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். பறவைக் காய்ச்சலை எதிர்த்துப் போராட புறாக்களை கொல்ல வேண்டும் என்று அழைப்பு...