Newsஉலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பு

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பு

-

கொரோனா பெருந்தொற்று தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பெருந்தொற்று தனது நாட்டில் வெளிப்பட்டது தொடர்பான தரவுகளை சீனா தொடர்ந்து மறைத்து வருவதாக குற்றச்சாட்டு நீடிக்கின்றது. 

கொரோனாவின் ஆரம்ப காலத்தில், உகான் நகரத்தில் ஹவானன் சந்தைதான், தொற்றின் மையமாக விளங்கியது. ஆனால் அங்கிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்புள்ள தரவுகளை சீனா வெளிப்படையாக வெளியிடவில்லை. இதை உலக சுகாதார அமைப்பு கண்டித்து எச்சரித்துள்ளது. 

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பான ஒவ்வொரு தரவுகளும் உடனடியாக சர்வதேச சமூகத்துடன் பகிரப்பட வேண்டும்.

இந்தத் தரவுகள் 3 ஆண்டுகளுக்கு முன்பே பகிரப்பட்டிருக்க வேண்டும். தரவுகளை பகிர்ந்து கொள்வதில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

Centrelink ஆஸ்திரேலியர்களுக்கு அதிகமாகச் செலுத்திய சலுகைகள்

ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு Centrelink அதிக சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. சில தனிநபர்களுக்கு $20,000 க்கும் அதிகமாக ஊதியம் வழங்கப்பட்டதாக Guardian Australia அறிக்கை குறிப்பிடுகிறது. தானியங்கி BPay...

ஆஸ்திரேலியாவில் வார இறுதியில் மாற்றமடையும் வானிலை

இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடியுடன் கூடிய மழை மற்றும் வெப்ப அலைகள்...

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார்...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...

கரீபியன் தீவுகள் நோக்கி மிகப்பெரிய போர்க் கப்பலை அனுப்பிய அமெரிக்கா

USS Gerald R Ford எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார்...

குயின்ஸ்லாந்தில் வீட்டில் சமைக்கப்பட்ட உணவில் எலி விஷம் – ஐவர் மருத்துவமனையில் அனுமதி

குயின்ஸ்லாந்தின் Logan-இல் இருந்து வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எலி விஷத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. இதன் விளைவாக Logan பகுதியில் ஒரு குழந்தை உட்பட...