Newsபயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!

பயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!

-

உலக நாடுகளை அச்சுறுத்தும் நிகழ்வுகளில் பயங்கரவாதம் முக்கியமான ஒன்றாகும். இது பொதுமக்களின் அமைதியை முற்றிலும் சீர்குலைக்கின்றது. 

அது மட்டுமின்றி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் சவாலாக உள்ளது. எனவே பயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா. மற்றும் பல தனியார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

அந்த வகையில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நிறுவனம் சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலை வெளியிட்டு வருகின்றது. 

அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன.

தெற்கு ஆசியாவில் அதிக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்ற நாடுகளில் கடந்த 2017 முதல் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை பிடித்திருந்தது. 

தற்போது அந்த இடத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இது 6-வது இடமாகும். கடந்த 2022-ல் மட்டும் பயங்கரவாத சம்பவங்கள் மூலம் அங்கு 643 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...