Newsசிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

-

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகின்றது.

ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் இராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகின்றது. 

இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் அலெப்போ மாகாணத்தில் உள்ள அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

அதிகாலை நேரத்தில் இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து பல ஏவுகணைகளை வீசின. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. 

அதே சமயம் ஏவுகணைகள் தாக்கியதில் விமான நிலையம் பலத்த சேதம் அடைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகள் வந்து சேரும் முக்கிய வழித்தடமாக அலெப்போ சர்வதேச விமான நிலையம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...