Sportsஉலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

உலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

-

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டி ஆக்லாந்து நேரப்படி மதியம் 02:00 மணிக்கு அல்லது மெல்போர்ன் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு தொடங்கும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு இலங்கை நேரடியாக தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பும் இதுவாகும்.

இன்று ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 03 போட்டிகள் உள்ளடங்குவதுடன், இந்த மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால், எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இரண்டு வருடங்களின் பின்னர் இன்றைய போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏஞ்சலோ மெத்தியூஸ் களமிறங்க உள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான 100வது ஒருநாள் போட்டியாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 99 ஒரு நாள் போட்டிகளில், நியூசிலாந்து 49 போட்டிகளிலும், இலங்கை 41 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை அணி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றியை பதிவு செய்யவில்லை.

அத்துடன், சனத் ஜெயசூர்யா தலைமையில் 2001ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கடைசியாக வெற்றி பெற்றது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...