Sportsஉலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

உலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

-

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டி ஆக்லாந்து நேரப்படி மதியம் 02:00 மணிக்கு அல்லது மெல்போர்ன் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு தொடங்கும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு இலங்கை நேரடியாக தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பும் இதுவாகும்.

இன்று ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 03 போட்டிகள் உள்ளடங்குவதுடன், இந்த மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால், எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இரண்டு வருடங்களின் பின்னர் இன்றைய போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏஞ்சலோ மெத்தியூஸ் களமிறங்க உள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான 100வது ஒருநாள் போட்டியாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 99 ஒரு நாள் போட்டிகளில், நியூசிலாந்து 49 போட்டிகளிலும், இலங்கை 41 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை அணி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றியை பதிவு செய்யவில்லை.

அத்துடன், சனத் ஜெயசூர்யா தலைமையில் 2001ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கடைசியாக வெற்றி பெற்றது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...