Newsஅமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 மாணவர்கள் உட்பட 6 பேர்...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

-

நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். 

அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் மூன்று மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபரும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நாஷ்வில் பகுதியைச் சேர்ந்த ஆட்ரி எலிசபெத் ஹேல் என்றும், அவர் ஒரு காலத்தில் அதே பள்ளியில் படித்தவர் என்றும் பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னதாக மழலையர் பள்ளி முதல் ஆறாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படிக்கும் பிரஸ்பைடிரியன் பள்ளியான தி கோவனன்ட் பள்ளியில் இந்த வன்முறை ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு டெக்சாஸ், உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த படுகொலை உட்பட, நாடு முழுவதும் உள்ள சமூகங்கள் பள்ளி வன்முறைகளின் தொடர்ச்சியால் தத்தளித்து வரும் நிலையில் இந்த கொலைகள் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...