Newsகோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 35 பக்தர்கள் உயிரிழப்பு

கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 35 பக்தர்கள் உயிரிழப்பு

-

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ள சுமார் 40 அடி ஆழ கிணற்றின் மேல் பகுதி கொங்கிரீட்டினால் மூடப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்வார்கள்.

இந்நிலையில், நேற்று ராமநவமி விழா என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் சிலப் வழியாக நடந்து சென்றனர்.

நேற்று பகல் 12.30 மணி அளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் கொங்கிரீட் சிலப் மீது நடந்து சென்றனர். இதில் பாரம் தாங்காமல் அந்த சிலப் திடீரென உடைந்து விழுந்ததில் சிலப் மீது நின்ற பக்தர்கள் அனைவரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

40 அடி ஆழ கிணற்றுக்குள் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். மேலும் பலர் கிணற்றின் பக்க சுவர்களில் மோதி படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பக்தர்கள் பலர் தலையில் அடிப்பட்டும், மூச்சு திணறியும் மயங்கி கிடந்தனர். அவர்களை பரிசோதித்த போது பலர் இறந்திருப்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் நேற்று வரை 13 பக்தர்கள் உயிரிழந்தாகக் கூறப்பட்டது. அதன்பின்பும் கிணற்றுக்குள் பக்தர்கள் பலர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அவர்களை மீட்க இராணுவத்தினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் வந்தனர். அவர்கள் விடிய, விடிய கிணற்றுக்குள் கிடந்தவர்களை மீட்டனர். இதில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இன்னும் பலர் கிணற்றுக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

அவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இப்பணி முடிவடையும் போது பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது. இதற்கிடையே காயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 16 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

Asbestos அச்சத்தால் திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தைகள் பொம்மை தயாரிப்பு

குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் மற்றொரு வண்ணமயமான மணல் தயாரிப்பு, Asbestos கவலைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொருளான Kadink Decorative Sand 10 கிராம் Six-pack,...

ஆஸ்திரேலியர்களை மீண்டும் எச்சரிக்கும் காமன்வெல்த் வங்கி

காமன்வெல்த் வங்கி ஆஸ்திரேலியர்களுக்கு மற்றொரு பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறைந்த பொருளாதார வளர்ச்சி ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் சரிவுக்கு வழிவகுக்கும் என்று இது பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக...

ஆஸ்திரேலிய தேவாலயத்திற்கு தீ வைத்த நபர் – $75,000 சேதம்

ஆஸ்திரேலியாவின் Ballarat-இல் உள்ள Cathedral of Christ the King உள்ள பலிபீடத்திற்கு (Altar) தீ வைத்ததாக விக்டோரியன் நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீ...

உங்கள் தொலைந்துபோன தொலைபேசிகளிலிருந்து பல டாலர்கள் சம்பாதிக்கும் PhoneCycle

ஆஸ்திரேலிய நிறுவனமான PhoneCycle, விமானங்கள், பேருந்துகள் மற்றும் ரயில்களில் விடப்பட்ட 700,000க்கும் மேற்பட்ட தொலைபேசிகளை செயலாக்கியதாக அறிவித்துள்ளது. 90 நாட்களுக்குள் உரிமையாளர்களால் தொலைந்து போன சாதனங்களைக் கண்டுபிடிக்க...

ஆஸ்திரேலிய தேவாலயத்திற்கு தீ வைத்த நபர் – $75,000 சேதம்

ஆஸ்திரேலியாவின் Ballarat-இல் உள்ள Cathedral of Christ the King உள்ள பலிபீடத்திற்கு (Altar) தீ வைத்ததாக விக்டோரியன் நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீ...