Newsகோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 35 பக்தர்கள் உயிரிழப்பு

கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 35 பக்தர்கள் உயிரிழப்பு

-

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ள சுமார் 40 அடி ஆழ கிணற்றின் மேல் பகுதி கொங்கிரீட்டினால் மூடப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்வார்கள்.

இந்நிலையில், நேற்று ராமநவமி விழா என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த கொங்கிரீட் சிலப் வழியாக நடந்து சென்றனர்.

நேற்று பகல் 12.30 மணி அளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் கொங்கிரீட் சிலப் மீது நடந்து சென்றனர். இதில் பாரம் தாங்காமல் அந்த சிலப் திடீரென உடைந்து விழுந்ததில் சிலப் மீது நின்ற பக்தர்கள் அனைவரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

40 அடி ஆழ கிணற்றுக்குள் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். மேலும் பலர் கிணற்றின் பக்க சுவர்களில் மோதி படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பக்தர்கள் பலர் தலையில் அடிப்பட்டும், மூச்சு திணறியும் மயங்கி கிடந்தனர். அவர்களை பரிசோதித்த போது பலர் இறந்திருப்பது தெரியவந்தது.

இந்த விபத்தில் நேற்று வரை 13 பக்தர்கள் உயிரிழந்தாகக் கூறப்பட்டது. அதன்பின்பும் கிணற்றுக்குள் பக்தர்கள் பலர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அவர்களை மீட்க இராணுவத்தினரும், பேரிடர் மீட்பு குழுவினரும் வந்தனர். அவர்கள் விடிய, விடிய கிணற்றுக்குள் கிடந்தவர்களை மீட்டனர். இதில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இன்னும் பலர் கிணற்றுக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

அவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இப்பணி முடிவடையும் போது பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது. இதற்கிடையே காயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 16 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நன்றி தமிழன்

Latest news

உலகின் ‘வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்’ விபத்தில் மரணம்

உலகின் வயதான மராத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை என்று நம்பப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் Fauja Singh, கார் மோதி உயிரிழந்தார். உயிரிழக்கும்போது அவருக்கு 114...

எஃகு உற்பத்தியில் ஒரு புதிய புரட்சி வருகிறது – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவும் சீனாவும் பசுமை எஃகு (green steel) துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். ஆஸ்திரேலிய இரும்புத் தாது உற்பத்தியாளர்களுக்கும் சீன...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...

விக்டோரியாவில் விமானத்தை கடத்த முயன்ற இளைஞனுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

விக்டோரியாவில் விமானத்தைக் கடத்த முயன்ற மைனர் ஒருவரின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவில் உள்ள Avalon விமான நிலையத்தில், 17 வயது இளைஞன்...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...