Newsஅமெரிக்காவை தாக்கிய சூறாவளி - பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி – பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

-

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடந்த சில மாதங்களாக பனிப்புயல், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதனால் ஏற்படும் பாதிப்புகளின் தீவிர தன்மையை குறைக்க அரசாங்கம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக வருகின்ற 10 ஆம் திகதி வரை வானிலை ஆய்வு மையம் அங்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த புயல் காற்று வீசியுள்ளது.

இதனால் ஆர்கன்சாஸ், ஒக்லகாமா, இல்லினாயிஸ், டென்னசி, அயோவா, மிசிசிபி உள்ளிட்ட மாகாணங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான வீடுகள் மற்றும் அலுவலகங்கள் சேதம் அடைந்தன. மேலும் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பல நகரங்கள் இருளில் மூழ்கின. 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதேபோல் சாலைகளில் விழுந்த மரங்களால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த புயல் காற்றுக்கு நாடு முழுவதும் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் புத்தகங்கள் பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம்

விருது பெற்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் கிரெய்க் சில்விக்கு எதிரான கடுமையான குழந்தை துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளால் இலக்கிய உலகம் அதிர்ந்துள்ளது. அவரது அனைத்து படைப்புகளையும் சந்தை மற்றும் பள்ளி...

ஆஸ்திரேலிய பாதாள உலகத் தலைவர் ஈராக்கில் கைது

ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறையினரால் தேடப்படும் முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவரான Kazem Hamad ஈராக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏராளமான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்...

ஆஸ்திரேலியா முழுவதும் அமேசானுக்கு எதிராக பாரிய போராட்டங்கள்

பில்லியனர் ஜெஃப் பெசோஸின் அமேசானுக்கு எதிராக ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு பெரிய தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலிய தொழிலாளர்களை அமேசான் சுரண்டுவதையும் உள்ளூர் வணிகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும்...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...