Newsஆஸ்திரேலியாவின் முதியவர்களில் 80% பேர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியாவின் முதியவர்களில் 80% பேர் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாக தகவல்

-

அவுஸ்திரேலியாவின் முதியோர்களில் 80 வீதமானோர் வாழ்க்கைச் செலவில் விரைவான அதிகரிப்பு காரணமாக கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதையும் உள்ளடக்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 50 வயதுக்கு மேற்பட்ட 5,700 பேரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள், எரிபொருள் உள்ளிட்ட எரிசக்திக் கட்டணங்கள், சுகாதாரச் செலவுகள் என்பன முக்கியப் பிரச்சினைகளாக இருப்பதுடன் வீட்டுப் பிரச்சினையும் கவனம் செலுத்த வேண்டிய விடயம் என கணக்கெடுப்பில் பங்களித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொலைதூர பிரதேசங்களில் வசிக்கும் மக்களும், குறைந்த வருமானம் கொண்டவர்களும் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை அதிகரிக்காமல் காலாண்டுக்கு ஒருமுறை அதாவது வருடத்திற்கு 04 முறை ஓய்வூதியம் வழங்க வேண்டும் என இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...