Newsகூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

-

உலக பொருளாதாரம் மந்த நிலையின் ஒரு பகுதியாகவும், உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட காரணங்களாலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளன.

இந்த பட்டியலில் கூகுள் நிறுவனமும் இடம் பிடித்துள்ளது. இதன்படி, கடந்த ஜனவரி 3 ஆம் வாரத்தில் 12 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கும் அதிரடி முடிவை கூகுள் நிறுவனம் எடுத்தது. 

இந்த அதிர்ச்சியில் இருந்து பணியாளர்கள் மீள்வதற்குள் கூகுள் நிறுவனம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கையை அடுத்து, பணியாளர்களுக்கான பல்வேறு சேவைகளை கைவிடுவது என்று முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஊழியர்களுக்கு பணியின்போது மசாஜ் சேவை வழங்குவது, உடலை கட்டுக்கோப்புடன் வைப்பதற்கான வகுப்புகள், பழுதடைந்த மடிகணனிக்கு பதிலாக புதிதாக ஒன்றை மாற்றி தருவது, போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை கைவிட கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் ரூத் போரட் மிக அரிதிலும் அரிது என்ற வகையில், அனைத்து பணியாளர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

அதில், செலவை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவது பற்றி சுட்டி காட்டப்பட்டுள்ளது. இதனால், 2023 ஆம் ஆண்டில் நீண்டகால சேமிப்புக்கான இலக்கை நிறுவனம் அடையும் என தெரிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தில் பயன்பாட்டில் உள்ள காகிதங்களை இணைக்க உதவும் ஸ்டேபிளர்கள் மற்றும் ஒட்ட பயன்படும் டேப்புகள் உள்ளிட்டவற்றையும் கூட கூகுள் நிறுவனம் வழங்காமல் அவற்றை நிறுத்தி விடுவது என முடிவு செய்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...