Sportsடெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி -...

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி – IPL 2023

-

16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகின்றது. 

நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதின. 

இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணியின் அணித்தலைவர் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த வகையில், டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

அணியின் தொடக்க ஆட்டக்காரரரும் அணித்தலைவருமான டேவிட் வார்னர் தாக்குப்பிடித்து 37 ஓட்டங்களை எடுத்தார். 

சர்ப்ராஸ் கான் 30 ஓட்டமும், அபிஷேக் பொரெல் 20 ஓட்டமும் எடுத்தனர். 

கடைசி கட்டத்தில் அக்சர் படேல் பொறுப்புடன் ஆடி 36 ஓட்டங்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. 

குஜராத் சார்பில் ஷமி, ரஷீத் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. 

இதில், சாய் சுதர்ஷன் அதிகபட்சமாக 48 பந்துக்கு 62 ஓட்டங்கள் குவித்தார். தொடர்ந்து விஜய் சங்கர் 29 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 31 ஓட்டங்களும், சாஹா மற்றும் ஷூப்மன் கில் தலா 14 ஓட்டங்களும், ஹர்திக் பாண்டியா 5 ஓட்டமும் எடுத்தனர். 

போட்டியின் இறுதியில் 18.1 ஓவரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 163 ஓட்டங்களை எடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

திரும்பப் பெறப்பட்ட Tesla வாகனங்கள் 

மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...

பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று

அதிக பயங்கரவாத ஆபத்து உள்ள 50 நாடுகளில் ஆஸ்திரேலியாவும் பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, அந்த 50 நாடுகளில் மேற்கத்திய நாடுகளாகக் கருதப்படும் 7 நாடுகளும் அடங்கும், மேலும்...

செல்லப்பிராணிகளை வளர்க்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

செல்லப்பிராணிகளை வைத்திருக்கும் விக்டோரியர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்வான் ஹில் நகர சபை, அதன் அதிகார வரம்பில் வசிக்கும் விக்டோரியர்களிடம், செல்லப்பிராணியைத் தத்தெடுக்க இனி வீட்டுப்...

விமானப் பயணத்திற்கு பயப்படும் ஆஸ்திரேலியர்கள்!

ஆஸ்திரேலியர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் விமானப் பயணத்திற்கு பயப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இதை ஒரு அதிர்ச்சிகரமான சூழ்நிலை என்று...

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்க வேண்டும் – பிரதமர் ஜெசிந்தா ஆலன்

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் வலியுறுத்துகிறார். இருப்பினும், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், மாநிலப் பிரதமரின் வாக்குறுதி வார்த்தைகளுக்குள் மட்டுமே...

பிரிஸ்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரிஸ்பேர்ண் உட்பட குயின்ஸ்லாந்து மக்கள் ஆல்ஃபிரட் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளி குயின்ஸ்லாந்து கடற்கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், நேற்று...