Newsமீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் - பெயர் பட்டியலை வெளியிட்ட...

மீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் – பெயர் பட்டியலை வெளியிட்ட நாசா

-

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கான விண்வெளி வீரர்களின் பெயர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்றும் நாசா பெயர் சூட்டியுள்ளது. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்பியது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2022 நவம்பரில் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது.

நிலவுக்கு பின்பக்கத்தில் ஓரியான் எனும் கேப்ஸ்யூல் அனுப்பப்பட்டது. அது வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாசாவும், கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஏயும் (கனடியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி) இணைந்து ஆர்ட்டெமிஸ் ஐஐ திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வரிசையில் இந்த திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை அறிவித்துள்ளது.

இக்குழுவில் நாசா வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா ஹாமக் கோச், கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வீரர் ஜெரமி ஹான்சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் ஒரு பெண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நிலவுக்குச் செல்லும் வீரர்கள் குழுவில் கனடா விண்வெளி வீரர் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார். ஒரு கறுப்பின வம்சாவளி வீரரும் இருக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு Seek-இன் தரவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சுகாதாரம்,...

ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இலவச வாய்ப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக வந்திறங்கிய திறமையான புலம்பெயர்ந்தோருக்கான அறிமுக நிகழ்ச்சியை நடத்த மாநில அரசு தயாராகி வருகிறது. அதன்படி, தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய புதிய குடியேற்றவாசிகளுக்கு...

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...