Newsமீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் - பெயர் பட்டியலை வெளியிட்ட...

மீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் – பெயர் பட்டியலை வெளியிட்ட நாசா

-

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கான விண்வெளி வீரர்களின் பெயர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்றும் நாசா பெயர் சூட்டியுள்ளது. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்பியது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2022 நவம்பரில் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது.

நிலவுக்கு பின்பக்கத்தில் ஓரியான் எனும் கேப்ஸ்யூல் அனுப்பப்பட்டது. அது வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாசாவும், கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஏயும் (கனடியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி) இணைந்து ஆர்ட்டெமிஸ் ஐஐ திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வரிசையில் இந்த திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை அறிவித்துள்ளது.

இக்குழுவில் நாசா வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா ஹாமக் கோச், கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வீரர் ஜெரமி ஹான்சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் ஒரு பெண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நிலவுக்குச் செல்லும் வீரர்கள் குழுவில் கனடா விண்வெளி வீரர் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார். ஒரு கறுப்பின வம்சாவளி வீரரும் இருக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

மெல்பேர்ணில் இரண்டு மாடி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு பெரிய கிடங்கில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் குறித்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பல முறை...