Newsமீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் - பெயர் பட்டியலை வெளியிட்ட...

மீண்டும் நிலவிற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் – பெயர் பட்டியலை வெளியிட்ட நாசா

-

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் 2 திட்டத்திற்கான விண்வெளி வீரர்களின் பெயர் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது.

நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஈடுபட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ஆர்ட்டெமிஸ் என்றும் நாசா பெயர் சூட்டியுள்ளது. கடந்த 1969 வாக்கில் அப்போலோ 11 மூலம் நிலவுக்கு மனிதர்களை நாசா அனுப்பியது. அதற்கு பிறகு இப்போது மீண்டும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2022 நவம்பரில் ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தின் சோதனை வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது.

நிலவுக்கு பின்பக்கத்தில் ஓரியான் எனும் கேப்ஸ்யூல் அனுப்பப்பட்டது. அது வெற்றி பெற்றது.

இந்நிலையில் நாசாவும், கனடா நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான சிஎஸ்ஏயும் (கனடியன் ஸ்பேஸ் ஏஜென்ஸி) இணைந்து ஆர்ட்டெமிஸ் ஐஐ திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வரிசையில் இந்த திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் குழுவை அறிவித்துள்ளது.

இக்குழுவில் நாசா வீரர்கள் ரீட் வைஸ்மேன், விக்டர் குளோவர், கிறிஸ்டினா ஹாமக் கோச், கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வீரர் ஜெரமி ஹான்சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவில் ஒரு பெண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நிலவுக்குச் செல்லும் வீரர்கள் குழுவில் கனடா விண்வெளி வீரர் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார். ஒரு கறுப்பின வம்சாவளி வீரரும் இருக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

Pocket Money-ஐ சேமிக்கும் குழந்தைகள் – ஆய்வில் தகவல்

ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான டாலர்களை பாக்கெட் மணியாக சேமித்து வைப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நாட்டில் உள்ள பிள்ளைகள்...

ஆஸ்திரேலியர்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ள வீட்டுக் காப்பீடு

ஆஸ்திரேலியர்களுக்கு வீட்டுக் காப்பீடு முதன்மையான பிரச்சனையாக மாறியுள்ளது என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டுக் காப்பீட்டு நிறுவனங்களை மாற்றுவதன் மூலம் நூற்றுக்கணக்கான டாலர்களைச் சேமிக்க முடியும்...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...

ஜெர்மனிக்கு சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட்டுக்கு பயணித்த இந்திய விமானம் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் சந்தேகத்திற்கிடமான குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து,...

கடத்தப்பட்ட விசாரணைக்கு சென்ற போலீஸ் கார்

நியூ சவுத் வேல்ஸின் நரோமைன் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல்துறை அதிகாரிகளின் காரை யாரோ திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை...