Newsஇணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

இணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

-

திருடப்பட்ட கணக்கு விவரங்களை பணத்திற்கு விற்பதற்காக இணையதளம் நடத்திய குற்றச்சாட்டில் 10 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 70,000 பேர் இந்த இணையதளத்தை அணுக அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்படாத கணக்கு விவரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டுச் சோதனையானது அமெரிக்க FBI உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையால் நடத்தப்பட்டது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, சுமார் 36,000 ஆஸ்திரேலியர்கள் இந்த வர்த்தகத்தில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய நிறுவனங்களான Optus – Medibank மற்றும் Latitude Financial Services மீது நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்களுக்கும் இந்த மோசடி இணையத்தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் பின்னணியில் ரஷ்யா மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...