உயிர் காக்கும் மருந்துகள் உட்பட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து மருந்தகங்களுக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது 379 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறை இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இவற்றில் சில மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இல்லை என்று செய்திகள் வந்துள்ளன.
நன்றி தமிழன்