News2 சிட்னி ஓடுபாதைகள் மூடப்பட்டன - விமானம் தாமதம்

2 சிட்னி ஓடுபாதைகள் மூடப்பட்டன – விமானம் தாமதம்

-

பலத்த காற்று காரணமாக சிட்னி விமான நிலையத்தில் 02 ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

ஒரே ஒரு ஓடுபாதை மட்டுமே பயன்பாட்டில் உள்ளதால் விமானங்கள் தாமதமாகலாம் என சிட்னி விமான நிலையம் அறிவித்துள்ளது.

உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களுக்கு – உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு இது பொருந்தும்.

ஒரு விமானத்தின் அதிகபட்ச தாமதம் ஒரு மணிநேரம் முதல் 1 1/2 மணிநேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

சிட்னி விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் இன்று மணிக்கு 30 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இருப்பினும், இதுவரை எந்த விமானங்களும் ரத்து செய்யப்படவில்லை.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...