Sportsசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. 

10-வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ஓட்டத்திலும், ஆரம்ப ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ஓட்டத்திலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உட்பட 21 ஓட்டங்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ஓட்டத்தில் அவுட்டானார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

ஆரம்ப ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ஓட்டத்திலும், தீபக் ஹூடா ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ஓட்டத்தில் அவுட்டானார். அணித்தலைவர் கே.எல்.ராகுல் 35 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...