Sportsசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. 

10-வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ஓட்டத்திலும், ஆரம்ப ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ஓட்டத்திலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உட்பட 21 ஓட்டங்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ஓட்டத்தில் அவுட்டானார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

ஆரம்ப ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ஓட்டத்திலும், தீபக் ஹூடா ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ஓட்டத்தில் அவுட்டானார். அணித்தலைவர் கே.எல்.ராகுல் 35 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...