Sportsசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. 

10-வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ஓட்டத்திலும், ஆரம்ப ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ஓட்டத்திலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உட்பட 21 ஓட்டங்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ஓட்டத்தில் அவுட்டானார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

ஆரம்ப ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ஓட்டத்திலும், தீபக் ஹூடா ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ஓட்டத்தில் அவுட்டானார். அணித்தலைவர் கே.எல்.ராகுல் 35 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

கிறிஸ்துமஸ் தின வானிலை முன்னறிவிப்பு

இந்த வாரம் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் புயல்கள் பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் டிசம்பர் 25 ஆம் திகதி...

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...