Sportsசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. 

10-வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ஓட்டத்திலும், ஆரம்ப ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ஓட்டத்திலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உட்பட 21 ஓட்டங்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ஓட்டத்தில் அவுட்டானார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

ஆரம்ப ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ஓட்டத்திலும், தீபக் ஹூடா ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ஓட்டத்தில் அவுட்டானார். அணித்தலைவர் கே.எல்.ராகுல் 35 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...