Sportsசன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - IPL...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. 

10-வது லீக் போட்டியில் நேற்றைய தினம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 121 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. ராகுல் திரிபாதி 35 ஓட்டத்திலும், ஆரம்ப ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங் 31 ஓட்டத்திலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 10 பந்தில் 2 சிக்சர் உட்பட 21 ஓட்டங்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 16 ஓட்டத்தில் அவுட்டானார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சார்பில் குருணால் பாண்ட்யா 3 விக்கெட் வீழ்த்தினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும், ரவி பிஷ்னோய், யாஷ் தாகுர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதையடுத்து, 122 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

ஆரம்ப ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 13 ஓட்டத்திலும், தீபக் ஹூடா ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய குருணால் பாண்ட்யா 34 ஓட்டத்தில் அவுட்டானார். அணித்தலைவர் கே.எல்.ராகுல் 35 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

Latest news

WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சங்கள்

Meta நிறுவனம் WhatsAppல் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, WhatsApp பயனர்கள் அரட்டைகளை Filter செய்வதற்கான திறனைப் பெறுவார்கள். இவை பல்வேறு அளவுகோல்களின் கீழ் பயனர்களின் அரட்டைப் பட்டியலை...

ஆராதனையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஆயரிடம் இருந்து முதல் முறையாக சிறப்பு அறிக்கை

இணையத்தில் ஒளிபரப்பாகும் சேவையின் போது கத்தியால் குத்திய இளைஞனை மன்னிப்பதாக பிஷப் மேரி இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு, தாக்கியவரை பகிரங்கமாக மன்னித்து, தனது...

கத்திக்குத்துக்குப் பிறகு மீண்டும் திறந்த கடை உரிமையாளர்கள்

சிட்னியின் Bondi சந்திப்பில் உள்ள Westfield  ஷாப்பிங் மால் இன்று காலை 11 மணிக்கு திறக்கப்பட்டது. கத்திக்குத்தால் 6 உயிர்களைக் கொன்ற பிறகு இன்றே முதல்...

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பஞ்சாப்பை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை – IPL 2024

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப்...

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...