Sportsபஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் - IPL 2023

பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் – IPL 2023

-

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. நேற்றிரவு ஐதராபாத்தில் நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின. 

முதலில் பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாட அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 99 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சாம் கர்ரன் 22 ஓட்டங்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

ஐதராபாத் சார்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டும், உம்ரான் மாலிக், ஜேன்சன், ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் விளையாடியது. 

தொடக்கத்தில் ஹார்ரி புரூக் 13 ஓட்டங்கள், மயங்க் அகர்வால் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ராகுல் திரிபாதி , மார்க்ரம் இணைந்து சிறப்பாக விளையாடினர். 

ராகுல் திரிபாதி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அரைசதம் அடித்து அசத்தினார். 

இறுதியில்17.1 ஓவர்கள் முடிவில் 2விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

திரிபாதி 74 ஓட்டங்கள் , மார்க்ரம்37 ஓட்டங்கள் எடுத்து அட்டமிழக்காமல் அணியை வெற்றி பெற செய்தனர்.

நன்றி தமிழன்

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கரை ஒதுங்கியதில் 28 திமிங்கலங்கள் உயிரிழப்பு

மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 160க்கும் மேற்பட்ட திமிங்கலங்களில் 28 இறந்துவிட்டன. 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு விட தன்னார்வ குழுக்கள் நடவடிக்கை...

மெல்போர்னின் Highpoint ஷாப்பிங் சென்டரில் மற்றொரு கத்திக்குத்து

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மைனர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள்...

சுற்றுலாப் பயணிகள் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியா இடம்பிடித்துள்ளது. CEOWORLD இதழ் இந்த நாடுகளுக்கு 2024 ஆம் ஆண்டையொட்டி பெயரிட்டுள்ளது. இங்கு விஜயம்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற விரும்புவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற எதிர்பார்த்துள்ள சர்வதேச மாணவர்களுக்காக புதிய விழிப்புணர்வு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழக இணையதளத்திற்குச்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...