Sportsரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் -...

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – IPL 2023

-

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி மோதின. 

முதலில் துடுப்பெடுத்தாட பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணி களமிறங்கியது. பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை குவித்தது. 

டூ பிளெசிஸ் 79 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோலி 61 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார். தீபக் ஹூடா 9 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா டக் அவுட்டானார். கே.எல்.ராகுல் 18 ஓட்டத்தில் வெளியேறினார். 

விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடினார். 

அவர் 30 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 65 ஓட்டம் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 5 விக்கெட்டுக்கு 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 

அடுத்து இறங்கிய பூரன், பதோனி ஜோடி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பூரன் 15 பந்தில் அரை சதம் கடந்தார். 

அவர் 19 பந்தில் 62 ஓட்டத்தில் அவுட்டானார். ஆயுஷ் பதோனி கடைசி கட்டத்தில் 30 ஓட்டத்தில் எடுத்தார். 

இறுதியில், லக்னோ அணி 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டத்தில் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...