Sports3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான்...

3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி – IPL 2023

-

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின.

இந்தப் போட்டி சென்னையின் அணித்தலைவர் தோனிக்கு 200வது போட்டியாகும்.

அதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களில் அவுட்டானார். ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக ஆடினார். இதனால் ஓட்டம் வேகம் அதிகரித்தது.

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ஜடேஜா இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பட்லர் அரை சதமடித்தார். அவர் 52 ஓட்டத்தில் அவுட்டானார். அஸ்வின் 30 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை எடுத்துள்ளது.

ஹெட்மயர் 30 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். தோனி 32 ஓட்டங்கள், தொடர்ந்து ரகானே31 ஓட்டங்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ஓட்டங்களும், அலி 7 ஓட்டங்களும், ஜடேஜா 25 ஓட்டங்களும், ராயுடு ஒரு ஓட்டங்கள் எடுத்தனர்.

இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...