Sports 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான்...

3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி – IPL 2023

-

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின.

இந்தப் போட்டி சென்னையின் அணித்தலைவர் தோனிக்கு 200வது போட்டியாகும்.

அதன்படி, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களில் அவுட்டானார். ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த படிக்கல் அதிரடியாக ஆடினார். இதனால் ஓட்டம் வேகம் அதிகரித்தது.

2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 77 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், படிக்கல் 38 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.அடுத்த பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ஜடேஜா இரு விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பட்லர் அரை சதமடித்தார். அவர் 52 ஓட்டத்தில் அவுட்டானார். அஸ்வின் 30 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை எடுத்துள்ளது.

ஹெட்மயர் 30 ஓட்டங்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். தோனி 32 ஓட்டங்கள், தொடர்ந்து ரகானே31 ஓட்டங்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ஓட்டங்களும், அலி 7 ஓட்டங்களும், ஜடேஜா 25 ஓட்டங்களும், ராயுடு ஒரு ஓட்டங்கள் எடுத்தனர்.

இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...