Newsபயன்படுத்தப்படாத 'கூகுள்' கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

பயன்படுத்தப்படாத ‘கூகுள்’ கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

-

இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க ‘கூகுள்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து, இணையதளவாசிகள் பல விதங்களில் பயனடைந்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்புவது, புகைப்படங்களை சேமிப்பது, திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வது, யு டியூப் பயன்படுத்துவது, ஆவணங்களை சேமிப்பது என கூகுளின் அத்தனை அம்சங்களும் அனைவரையும் கவர்ந்துள்ளன.

கூகுள் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவை பயன்படுத்தப்படாமல் உள்ள சூழலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகளாக ஒரு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும். அந்த கணக்கு யாரோ ஒருவரால் தவறாக பயன்படுத்தப்படும். ஆகையால், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அவ்வாறு நீக்கப்பட்டால், மின்னஞ்சல் முகவரி, ஜி – மெயில் செய்திகள், கலண்டர் நிகழ்வுகள், கூகுள் டிரைவ், கூகுள் புகைப்படங்கள், யு டியூப், டெக்ஸ் எனப்படும் பணியிட கோப்புகள் போன்றவற்றை கணக்காளர்கள் பயன்படுத்த முடியாது. தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். நிறுவனங்கள், பாடசலைகள் அல்லது வணிகங்களுக்கான கணக்குகள் இதனால் பாதிக்கப்படாது.

ஒரு கணக்கை நீக்குவதற்கு முன், அதன் மின்னஞ்சல் முகவரி மற்றும் மீட்பு மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டிற்கும் அது தொடர்பான அறிவிப்புகள் சில மாதங்களுக்கு அனுப்பப்படும். அவ்வாறு எச்சரித்தும், கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், அதை நீக்குவதற்கான நடவடிக்கை துவங்கும். கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமென்றால், கூகுளின் ஏதாவது ஒரு சேவையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்பாட்டில் இருத்தல் அவசியம். இவ்வாறு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...