Newsபயன்படுத்தப்படாத 'கூகுள்' கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

பயன்படுத்தப்படாத ‘கூகுள்’ கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

-

இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க ‘கூகுள்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து, இணையதளவாசிகள் பல விதங்களில் பயனடைந்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்புவது, புகைப்படங்களை சேமிப்பது, திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வது, யு டியூப் பயன்படுத்துவது, ஆவணங்களை சேமிப்பது என கூகுளின் அத்தனை அம்சங்களும் அனைவரையும் கவர்ந்துள்ளன.

கூகுள் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவை பயன்படுத்தப்படாமல் உள்ள சூழலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகளாக ஒரு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும். அந்த கணக்கு யாரோ ஒருவரால் தவறாக பயன்படுத்தப்படும். ஆகையால், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அவ்வாறு நீக்கப்பட்டால், மின்னஞ்சல் முகவரி, ஜி – மெயில் செய்திகள், கலண்டர் நிகழ்வுகள், கூகுள் டிரைவ், கூகுள் புகைப்படங்கள், யு டியூப், டெக்ஸ் எனப்படும் பணியிட கோப்புகள் போன்றவற்றை கணக்காளர்கள் பயன்படுத்த முடியாது. தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். நிறுவனங்கள், பாடசலைகள் அல்லது வணிகங்களுக்கான கணக்குகள் இதனால் பாதிக்கப்படாது.

ஒரு கணக்கை நீக்குவதற்கு முன், அதன் மின்னஞ்சல் முகவரி மற்றும் மீட்பு மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டிற்கும் அது தொடர்பான அறிவிப்புகள் சில மாதங்களுக்கு அனுப்பப்படும். அவ்வாறு எச்சரித்தும், கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், அதை நீக்குவதற்கான நடவடிக்கை துவங்கும். கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமென்றால், கூகுளின் ஏதாவது ஒரு சேவையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்பாட்டில் இருத்தல் அவசியம். இவ்வாறு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...