Newsபயன்படுத்தப்படாத 'கூகுள்' கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

பயன்படுத்தப்படாத ‘கூகுள்’ கணக்குகளை நீக்க நிறுவனம் அதிரடி முடிவு

-

இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க ‘கூகுள்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து, இணையதளவாசிகள் பல விதங்களில் பயனடைந்து வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்புவது, புகைப்படங்களை சேமிப்பது, திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வது, யு டியூப் பயன்படுத்துவது, ஆவணங்களை சேமிப்பது என கூகுளின் அத்தனை அம்சங்களும் அனைவரையும் கவர்ந்துள்ளன.

கூகுள் கணக்கு துவங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், அவை பயன்படுத்தப்படாமல் உள்ள சூழலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் கூறியுள்ளதாவது: இரண்டு ஆண்டுகளாக ஒரு கணக்கு பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது அடையாளத் திருட்டுக்கு வழி வகுக்கும். அந்த கணக்கு யாரோ ஒருவரால் தவறாக பயன்படுத்தப்படும். ஆகையால், இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள கணக்குகளை வரும் டிசம்பர் மாதம் முதல் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அவ்வாறு நீக்கப்பட்டால், மின்னஞ்சல் முகவரி, ஜி – மெயில் செய்திகள், கலண்டர் நிகழ்வுகள், கூகுள் டிரைவ், கூகுள் புகைப்படங்கள், யு டியூப், டெக்ஸ் எனப்படும் பணியிட கோப்புகள் போன்றவற்றை கணக்காளர்கள் பயன்படுத்த முடியாது. தனிப்பட்ட கணக்குகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும். நிறுவனங்கள், பாடசலைகள் அல்லது வணிகங்களுக்கான கணக்குகள் இதனால் பாதிக்கப்படாது.

ஒரு கணக்கை நீக்குவதற்கு முன், அதன் மின்னஞ்சல் முகவரி மற்றும் மீட்பு மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டிற்கும் அது தொடர்பான அறிவிப்புகள் சில மாதங்களுக்கு அனுப்பப்படும். அவ்வாறு எச்சரித்தும், கணக்கு பயன்படுத்தப்படாவிட்டால், அதை நீக்குவதற்கான நடவடிக்கை துவங்கும். கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டுமென்றால், கூகுளின் ஏதாவது ஒரு சேவையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பயன்பாட்டில் இருத்தல் அவசியம். இவ்வாறு கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

காஸாவில் இயல்பான திறனை இழந்துள்ள 21,000 சிறுவர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காஸா பகுதியில் சுமார் 21,000 சிறுவர்கள் இயல்பான திறன்களை இழந்து மாற்றுத்திறனாளிகளாக மாறியுள்ளக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை...

ரிசர்வ் வங்கியின் ரொக்க விகிதக் குறைப்பு குறித்த கருத்துகள்

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி செப்டம்பரில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்காது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 0.25% குறைத்து...

முதல் முறையாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ள விக்டோரியன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஒரு கொலைக் குற்றத்திற்கான முதல் நேரடி ஒளிபரப்பு அடுத்த திங்கட்கிழமை விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும். ஜூலை 2023 இல், 50 வயதான Erin Patterson, ஒரு...

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை உற்பத்தி செய்துள்ள ஆஸ்திரேலியா

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை (marbled meat) ஆஸ்திரேலியா தயாரித்துள்ளது. இது நியூ சவுத் வேல்ஸில் உள்ள விவசாயிகள் குழுவால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோகிராம்...

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை உற்பத்தி செய்துள்ள ஆஸ்திரேலியா

உலகின் முதல் பளிங்கு ஆட்டுக்குட்டியை (marbled meat) ஆஸ்திரேலியா தயாரித்துள்ளது. இது நியூ சவுத் வேல்ஸில் உள்ள விவசாயிகள் குழுவால் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோகிராம்...

Shopping-ஐ மேலும் எளிதாக்கும் Amazon Australia

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக Amazon Afterpay-உடன் கூட்டு சேர்ந்துள்ளது. Buy Now, Pay Later சேவையைப் பயன்படுத்தி Amazon வலைத்தளம் மற்றும் செயலியில் பொருட்களை வாங்குவதை...