Newsசெயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் சாதனை

செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் சாதனை

-

இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர் ஹரி புத்தமகர்(43) தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீற்றர் உச்சத்தை எட்டினார்.

நேபாளத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஹரி புத்தமகர், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இதனால், 2018-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார். பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கிறிஸ்துமஸ் அட்டவணையை வெளியிட்டுள்ள FedEx

கிறிஸ்துமஸுக்கு முந்தைய டெலிவரிகளுக்கான Cut-off திகதிகளை FedEx வெளியிட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பார்சல்கள் சரியான நேரத்தில் வந்து சேருவதை உறுதிசெய்ய முன்கூட்டியே திட்டமிடுமாறு ஆஸ்திரேலியர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த மாதம்...

ஆஸ்திரேலியாவின் நிதி அமைப்பு கட்டுப்பாட்டை மீறிச் செல்லுமா?

ஆஸ்திரேலியாவின் பண விநியோக முறை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் மிஷேல் புல்லக் எச்சரித்துள்ளார். சைபர் ஹேக்கர்கள் Quantum Computing தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மறைகுறியாக்கப்பட்ட...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

குடல் பிரச்சினைகளுக்கு புதிய காரணத்தைக் கண்டுபிடித்துள்ள மெல்பேர்ண் ஆராய்ச்சியாளர்கள்

ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் குளுட்டன் சகிப்புத்தன்மை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தாது என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, FODMAPகள் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகளின் குழு, குளுட்டன் சகிப்புத்தன்மையால் ஏற்படும் குடல்...

விக்டோரியா காவல்துறை கொலையாளியைத் தேட சிறப்புப் பணிக்குழு!

விக்டோரியா காவல்துறையின் கொலையாளி Desi Freeman-ஐ தேடும் பணியை ஒரு சிறப்புப் பணிக்குழு கையகப்படுத்தியுள்ளது. Taskforce Summit என்று அழைக்கப்படும் இந்த சிறப்புப் படை, Freeman-ஐ தேடும்...