Newsசெயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் சாதனை

செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் சாதனை

-

இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர் ஹரி புத்தமகர்(43) தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீற்றர் உச்சத்தை எட்டினார்.

நேபாளத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஹரி புத்தமகர், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இதனால், 2018-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார். பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

உலக பல்கலைக்கழக தரவரிசையில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஆஸ்திரேலியா

2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இது உயர்கல்விக்கான ஆஸ்திரேலியாவின் உலகளாவிய நற்பெயரை சேதப்படுத்தியதாக எதிர்க்கட்சி கல்வி அமைச்சர் ஜோனாதன்...

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் விக்டோரியாவில் அதிகரிக்கும் குற்றங்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் விக்டோரியாவில் குற்றங்கள் அதிகரித்து வருவதாக விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது. இளைஞர் வன்முறையும் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. விக்டோரியன்...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...

சமூக ஊடக கணக்குகளை சரிபார்த்து மாணவர் விசாக்களை வழங்க அமெரிக்கா முடிவு 

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்களை மீண்டும் பரிசீலிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் சமூக ஊடக கணக்குகளைச் சரிபார்க்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை...

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் அமலுக்கு வரும் 16 வயதுக்குட்பட்டோருக்கான சமூக ஊடகத் தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டங்கள் டிசம்பர் முதல் அமலுக்கு வரும். இந்த நோக்கத்திற்காக வயது சரிபார்ப்பு...