News செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் சாதனை

செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரம் ஏறிய வீரர் சாதனை

-

இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் இராணுவ வீரர் ஹரி புத்தமகர்(43) தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீற்றர் உச்சத்தை எட்டினார்.

நேபாளத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஹரி புத்தமகர், செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இதனால், 2018-ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார். பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...