Newsகொரோனாவை விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு

கொரோனாவை விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு

-

கொரோனா தொற்றுநோயை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் ஆற்றிய உரை:

‘கொரோனா தொற்றுநோயை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று இனி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், அந்த பெருந்தொற்று மறைந்துவிடவில்லை. தொலைவில் இருக்கிறது. புதிய பெருந்தொற்று கொரோனா பெருந்தொற்றைவிட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்.

கொரோனா தொற்று நோய் வந்தபோது அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இல்லை. அதன் காரணமாக அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.

புதிய தொற்றுநோயும் வீழ்த்தக் கூடியதாக இருக்காது. அது நமது கதவை தட்டப் போகிறது. நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டால் அது நடக்கும். இப்போதே நாம் செய்யாவிட்டால், பிறகு எப்போது?’ என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

“ரஷ்யா – அமெரிக்கா” மீது கவனம் செலுத்தும் உலகம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சூசகமாக தெரிவித்துள்ளார். டிரம்பை சந்திக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சிறந்த இடம் என்று ரஷ்ய...

ஆஸ்திரேலிய வணிக வருமானம் – ஜூன் 2025 தரவு

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2025 இல் வணிக விற்றுமுதல் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கலை மற்றும் பொழுதுபோக்கு சேவைகள் துறை...

ஆஸ்திரேலியாவில் குறைந்து வரும் ஆதரவு சேவை மீதான நம்பிக்கை

வீட்டு மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான ஆலோசனை மற்றும் உதவிக்காக ஹாட்லைனுக்கு பெறப்பட்ட அழைப்புகளில் கிட்டத்தட்ட 60% பதிலளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆலோசனை சேவை வழங்குநரான DVConnect,...

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

டிஜிட்டல் பயணிகள் அட்டை முறையை அறிமுகப்படுத்தும் சிட்னி விமான நிலையம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிலையமான சிட்னி விமான நிலையம், சர்வதேச பயணிகளுக்காக digital incoming passenger card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Qantas-உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் உள்வரும்...