NewsYouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

-

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் யூடியூப் பயனர்கள் தாங்கள் என்ன வீடியோவை பதிவேற்றுகிறோம் என்பதை, முன்னோட்டமாக அறிவிப்பதாக ஸ்டோரீஸ் என்ற வசதி பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாக பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டிருக்கும், யூடியூபர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக வசதி அளிக்கப்பட்டு வந்தது.

இதில் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால், இந்த வசதியை யூடியூப் செயலியிலிருந்து ஜீன் 26ஆம் திகதி முதல், நீக்க போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த ஸ்டோரீஸ்களும், அடுத்த மாதம் 26ஆம் திகதியிலிருந்து 7 நாட்களுக்குள் நீக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த ஸ்டோரிஸ்களுக்கு பதிலாக, கம்யூனிட்டி போஸ்ட் அல்லது ரீல்ஸ் வழியாக, யூடியூபர்கள் தங்களது கதைகளை தெரிவிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டோரீஸ் வசதியை நீக்குவதன் மூலம் like Shorts, Community posts, live videos போன்றவற்றை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என்பதால், அந்த வசதிக்கு தடை விதிப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Latest news

வாடிக்கையாளர்களிடமிருந்து சூப்பர் மார்க்கெட் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம்

நியூசிலாந்தின் Woolworths பல்பொருள் அங்காடி ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரும் வன்முறைச் செயல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பாடி கேமராக்களை அணியும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த...

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட...

எலோன் மஸ்க்கின் நல்லறிவு குறித்து பிரதமரின் அறிக்கை

சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து காட்சிகளை அகற்ற எலோன் மஸ்க் மறுத்துவிட்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார். இ-பாதுகாப்பு ஆணையர் கோரியபடி ட்விட்டர் அகற்றாததால் தொடர்புடைய...

தைவானில் ஏற்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிலநடுக்கம்

தைவானில் இன்று காலை மேலும் ஒரு தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது, அங்கு சமீபத்தில் வலுவான நிலநடுக்கம் காரணமாக 13 பேர் இறந்தனர். யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒருவகை நோயின் தாக்கம்

வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல் தொற்றுநோய்க்கான பருவம் மீண்டும் வரவிருக்கிறது, மேலும் சில பகுதிகளில் காய்ச்சல்...

புற்றுநோயால் உயிரிழக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புற்றுநோயால் இறக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முதன்முறையாக புற்றுநோய்க்கு எதிரான தேசிய மூலோபாய திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி...