Newsஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத்...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

-

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டேன்.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன் என துஷியந்தன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் விவேகானந்தன் துஷியந்தன் உள்நாட்டு போர் காரணமாக 13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார்.

Latest news

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல்...

பிரபலமான விக்டோரியா கடற்கரையில் இறந்து கிடக்கும் மீன்கள்

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் ஆயிரக்கணக்கான இறந்த மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மெல்பேர்ணுக்கு கிழக்கே மூன்று மணி நேரம் தொலைவில் உள்ள லோச் ஸ்போர்ட் கடற்கரையில் அழுகிய...

ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த பொருளாதார நிபுணர்களின் கருத்து

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அடுத்த மாதம் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ANZ பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த ஆண்டு...

உலகில் அதிக பணமில்லா பயன்பாட்டைக் கொண்ட 10 நாடுகள்

ரொக்கமில்லா மாற்றுகள் மூலம் பரிவர்த்தனை செய்ய விரும்பும் முதல் 10 நாடுகள் குறித்து ForexBonuses ஆராய்ச்சி நடத்தியது. பல்வேறு நாடுகள் பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் கொடுப்பனவுகளை எவ்வாறு பயன்படுத்துகின்றன...

அமெரிக்கா மீது வரிகளை விதித்த சீனா!

டொனால்ட் டிரம்பின் வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீத வரியை சீனா விதித்துள்ளது. சீனா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருட்களுக்கு...

தொலைபேசி அலாரத்தால் உயிர் தப்பிய மெல்பேர்ண் பெண்மணி

மெல்பேர்ணில் தனது தொலைபேசியின் அலாரத்தால் உயிர் காப்பாற்றப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய செய்திகள் வந்துள்ளன. நேற்று காலை 6 மணியளவில் அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளுடைய...