Newsஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத்...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

-

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டேன்.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன் என துஷியந்தன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் விவேகானந்தன் துஷியந்தன் உள்நாட்டு போர் காரணமாக 13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார்.

Latest news

புறப்பட்ட 30 வினாடிகளில் விபத்துக்குள்ளான விமானம்

அமெரிக்க விமான விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தை உட்பட 5 பேர் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று, மருத்துவ போக்குவரத்து...

ஆஸ்திரேலியா மாணவர் விசா பற்றிய சமீபத்திய அறிவிப்பு

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் மாணவர் விசா வழங்குவது சாதனை அளவில் உயர்ந்துள்ளது. கடந்த நவம்பரில் வெளிநாட்டிலிருந்து விண்ணப்பித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களின் எண்ணிக்கை 17,000 என...

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு இலவசமாக கல்வி கற்க மற்றுமொரு வாய்ப்பு

இலங்கை மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பல அவுஸ்திரேலிய பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலியா விருதுகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ள இலங்கையர்களுக்கு...

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின்...

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின்...

பனியால் மூடப்பட்டுள்ள நயாகரா நீர்வீழ்ச்சி – இணையத்தில் வைரல்

உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி பனி மற்றும் பனியால் மூடப்பட்டிருக்கும் அற்புதமான காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. நீர்வீழ்ச்சியில் தண்ணீர் முழுமையாக உருகாமல் பனிப் படலத்தின் கீழ் தொடர்ந்து...