Newsஎவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத்...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

-

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டேன்.

கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன் என துஷியந்தன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் விவேகானந்தன் துஷியந்தன் உள்நாட்டு போர் காரணமாக 13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார்.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...