Newsமோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்து அவர்களிடமே $5 லட்சம் இழந்த மூதாட்டி

மோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்து அவர்களிடமே $5 லட்சம் இழந்த மூதாட்டி

-

91 வயதான மூதாட்டி ஒருவர் மோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களிடமே 5 லட்சம் டொலர்களை இழந்த சோகக்கதை இது.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கணவன் இன்றி வாழ்ந்துவந்த 91 வயது மார்கரெட்டிடம் வாழ்நாள் சேமிப்பாக 5 லட்சம் டொலர்கள் அவர் வசம் இருந்திருக்கிறது.

ஒரு நாள் இணையமோசடியில் ஈடுபடும் நபர் மார்கரெட்டைத் தொடர்புகொண்டு தனது பெயர் ஆண்ட்ரூ வில்லியம் என்றும், மோசடிக்கார்களைக் கண்டறிய ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையுடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாகவும் கூறியிருக்கிறார்.

காவல்துறை அதிகாரிபோல் வேடம் அணிந்த அந்நபர், மார்கரெட்டின் பணத்தை யாரோ திருட முயற்சிப்பதாகவும், அவர் தனது பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

ஒரு பாதுகாப்பான வங்கியில் பணத்தை வைக்குமாறும், இதன்மூலம் காவல்துறையினரால் இணையத்திருடர்களைக் கண்காணிக்க முடியும் எனவும் மார்கரெட்டிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ இதைச் சொல்ல வேண்டாம் என்றும் அது காவல்துறையினரின் இரகசிய நடவடிக்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் மார்கரெட்டை ஏமாற்றிய நபர் அவரை நம்பவைத்திருக்கிறார்

மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுவதாக நினைத்த மார்கரெட் சுமார் 10 மாத இடைவெளியில் தன்னிடமிருந்த கிட்டத்தட்ட அரை மில்லியன் டொலர்களை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறார்.

மார்கரெட் தனது புதிய கணக்கு ஒன்றில் இருந்து பணம் எடுக்க முயன்றபோது அது ஒரு மோசடி என்பதை உணர்ந்தார். தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தபோது அரை மில்லியன் டொலர்களை அவர் இழந்துவிட்டார்.

ஏனையோருக்கு விழிப்புணர்வூட்டும்வகையில் தனது இக்கதையை மார்கரெட் A Current Affair-இடம் பகிர்ந்திருந்தார்.

Latest news

மனிதர்கள் இல்லாத AI Bots மட்டுமே உள்ள ஒரு புதிய சமூக ஊடக தளம்

மனிதர்கள் இல்லாமல், AI Bots மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமூக வலைப்பின்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . "Moltbook" என்று அழைக்கப்படும் இது, கடந்த வாரம் தொழில்நுட்ப தொழில்முனைவோர்...

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

மெல்பேர்ண் தெருவிற்கு பெயர் மாற்றம் – எதிர்க்கும் குடியிருப்பாளர்கள்

மெல்பேர்ணின் வடக்கே உள்ள லாலரில் உள்ள Prince Andrew Avenue-இல் வசிப்பவர்கள், அதன் பெயரை மாற்றும் யோசனையை நிராகரித்துள்ளனர். இந்தத் தெருவுக்கு பல தசாப்தங்களாக முன்னாள் பிரிட்டிஷ்...