Newsபோலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்' புதிய வசதி

போலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்’ புதிய வசதி

-

பிரபல சமூக வலைதள நிறுவனமான, ‛ட்விட்டர்’ செயலியில், போலி செய்திகளை கண்டறிய, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ என்ற புதிய வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுதும், தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுது போக்கு செயலிகளில், அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக, ‛ட்விட்டர்’ உள்ளது.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.

இதை தடுக்க, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ எனும், புது அம்சத்தை அறிமுகப்படுத்த, ட்விட்டர் சோதனை செய்து வருகிறது.

இதன்படி, ட்விட்டரில் பதிவிடப்படும் ஒரு படத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள், அந்தப் படத்தைக் கொண்ட தற்போதைய மற்றும் எதிர்கால ட்விட்களில் தானாகவே காண்பிக்கப்படும்.

இதற்கேற்ப, ட்விட்டரில் பதிவிடப்படும் பதிவுகளுக்கேற்ப, ‛அபவுட் தி இமேஜ்’ எனும், விருப்ப பகுதியும் இடம்பெறும்.

இந்த விருப்பத்தை பயனர்கள், தேர்வு செய்தால், அவர்களால், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண முடியும்.

தற்போதைய நிலையில், ஒரே ஒரு படம் உள்ள ட்விட்டகளில் மட்டும், இம்முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வருங்காலத்தில், இதை முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட 50 சர்வதேச குற்றவாளிகள்

10 நாடுகளில் ஏராளமான குற்றங்களுடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு...

மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி

இந்த ஆண்டு மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத் தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் பதவி தொழிலாளர் கட்சி வேட்பாளர் ரோஜர்...

ஆஸ்திரேலியாவில் வீட்டு வேலைகளில் உதவாத ஆண்கள் – சமீபத்திய வெளிப்பாடு

ஆஸ்திரேலியாவில் ஆண்கள் இன்னும் வீட்டு வேலைகளில் உரிய கவனம் செலுத்துவதில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியப் பெண்கள் ஆண்களை விட வீட்டு வேலைகளைச் செய்வதில்...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...

மீண்டும் சேவையை தொடங்குகின்றன குயின்ஸ்லாந்து விமானங்கள்

குயின்ஸ்லாந்து விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பிரிஸ்பேர்ண் மற்றும் கோல்ட் கோஸ்ட் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் இன்னும் ரத்து...

ஆஸ்திரேலியா விமான நிலையங்களில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஆஸ்திரேலியாவின் இரண்டாம் நிலை விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மெல்பேர்ணில் உள்ள அவலோன் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் விக்டோரியா...