Newsபோலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்' புதிய வசதி

போலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்’ புதிய வசதி

-

பிரபல சமூக வலைதள நிறுவனமான, ‛ட்விட்டர்’ செயலியில், போலி செய்திகளை கண்டறிய, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ என்ற புதிய வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுதும், தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுது போக்கு செயலிகளில், அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக, ‛ட்விட்டர்’ உள்ளது.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.

இதை தடுக்க, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ எனும், புது அம்சத்தை அறிமுகப்படுத்த, ட்விட்டர் சோதனை செய்து வருகிறது.

இதன்படி, ட்விட்டரில் பதிவிடப்படும் ஒரு படத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள், அந்தப் படத்தைக் கொண்ட தற்போதைய மற்றும் எதிர்கால ட்விட்களில் தானாகவே காண்பிக்கப்படும்.

இதற்கேற்ப, ட்விட்டரில் பதிவிடப்படும் பதிவுகளுக்கேற்ப, ‛அபவுட் தி இமேஜ்’ எனும், விருப்ப பகுதியும் இடம்பெறும்.

இந்த விருப்பத்தை பயனர்கள், தேர்வு செய்தால், அவர்களால், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண முடியும்.

தற்போதைய நிலையில், ஒரே ஒரு படம் உள்ள ட்விட்டகளில் மட்டும், இம்முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வருங்காலத்தில், இதை முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...