Newsபோலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்' புதிய வசதி

போலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்’ புதிய வசதி

-

பிரபல சமூக வலைதள நிறுவனமான, ‛ட்விட்டர்’ செயலியில், போலி செய்திகளை கண்டறிய, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ என்ற புதிய வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுதும், தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுது போக்கு செயலிகளில், அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக, ‛ட்விட்டர்’ உள்ளது.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.

இதை தடுக்க, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ எனும், புது அம்சத்தை அறிமுகப்படுத்த, ட்விட்டர் சோதனை செய்து வருகிறது.

இதன்படி, ட்விட்டரில் பதிவிடப்படும் ஒரு படத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள், அந்தப் படத்தைக் கொண்ட தற்போதைய மற்றும் எதிர்கால ட்விட்களில் தானாகவே காண்பிக்கப்படும்.

இதற்கேற்ப, ட்விட்டரில் பதிவிடப்படும் பதிவுகளுக்கேற்ப, ‛அபவுட் தி இமேஜ்’ எனும், விருப்ப பகுதியும் இடம்பெறும்.

இந்த விருப்பத்தை பயனர்கள், தேர்வு செய்தால், அவர்களால், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண முடியும்.

தற்போதைய நிலையில், ஒரே ஒரு படம் உள்ள ட்விட்டகளில் மட்டும், இம்முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வருங்காலத்தில், இதை முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...