News போலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்' புதிய வசதி

போலி செய்திகளை கண்டறிய ‛ட்விட்டரில்’ புதிய வசதி

-

பிரபல சமூக வலைதள நிறுவனமான, ‛ட்விட்டர்’ செயலியில், போலி செய்திகளை கண்டறிய, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ என்ற புதிய வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உலகம் முழுதும், தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுது போக்கு செயலிகளில், அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக, ‛ட்விட்டர்’ உள்ளது.

இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.

இதை தடுக்க, ‛நோட்ஸ் ஓன் மீடியா’ எனும், புது அம்சத்தை அறிமுகப்படுத்த, ட்விட்டர் சோதனை செய்து வருகிறது.

இதன்படி, ட்விட்டரில் பதிவிடப்படும் ஒரு படத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள், அந்தப் படத்தைக் கொண்ட தற்போதைய மற்றும் எதிர்கால ட்விட்களில் தானாகவே காண்பிக்கப்படும்.

இதற்கேற்ப, ட்விட்டரில் பதிவிடப்படும் பதிவுகளுக்கேற்ப, ‛அபவுட் தி இமேஜ்’ எனும், விருப்ப பகுதியும் இடம்பெறும்.

இந்த விருப்பத்தை பயனர்கள், தேர்வு செய்தால், அவர்களால், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண முடியும்.

தற்போதைய நிலையில், ஒரே ஒரு படம் உள்ள ட்விட்டகளில் மட்டும், இம்முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

வருங்காலத்தில், இதை முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.