Newsசட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

-

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த விமானம், முன்பு ஆஸ்திரேலிய வான் படையில் இருந்த நிலையில், இனி இலங்கையின் எல்லைக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில், சட்டவிரோதமாக படகு வழியாக இலங்கையர்கள் புலம்பெயருவது தொடர்ந்து வரும் நிலையில், இவ்விமானம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விமானத்தை வழங்குவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீலின் கடிதத்தை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் ஒப்படைத்துள்ளார்.

இலங்கை கடற்படையின் அண்மைய கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த 43 சட்டவிரோத குடியேறிகள், ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், 2012 முதல் 2022ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயன்ற 1,314 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் விமானங்களில் Power Banks-ஐ எடுத்துச் செல்ல தடை

டிசம்பர் முதல் பல புதிய விமானப் பயண விதிகள் அமலுக்கு வரும் என்றும், இது ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விர்ஜின், குவாண்டாஸ்...

Modified மின்-பைக்குகளை தடை செய்யும் விக்டோரியாவின் மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகள்

பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக விக்டோரியாவின் ரயில் வலையமைப்பில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளுக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 முதல், மெட்ரோ மற்றும் பிராந்திய ரயில் சேவைகளில்...

குயின்ஸ்லாந்தில் பிறந்த உலகின் மிகச்சிறிய குழந்தை

குயின்ஸ்லாந்தில் பிறந்த குழந்தைகளிலேயே மிகவும் சிறியதாக சார்லி ஜோன்ஸ் என்ற ஆண் குழந்தை வரலாறு படைத்துள்ளது. அவரது எடை ஒரு கோக் கேனை விடக் குறைவாக, 360...

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் உள்ள Brown பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து Ivy...