Newsசட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

-

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த விமானம், முன்பு ஆஸ்திரேலிய வான் படையில் இருந்த நிலையில், இனி இலங்கையின் எல்லைக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சென்றடையும் நோக்கில், சட்டவிரோதமாக படகு வழியாக இலங்கையர்கள் புலம்பெயருவது தொடர்ந்து வரும் நிலையில், இவ்விமானம் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக விமானத்தை வழங்குவதாக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீலின் கடிதத்தை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் பால் ஸ்டீபன்ஸ் ஒப்படைத்துள்ளார்.

இலங்கை கடற்படையின் அண்மைய கூற்றுப்படி, 2023ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த 43 சட்டவிரோத குடியேறிகள், ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், 2012 முதல் 2022ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தஞ்சமடைய முயன்ற 1,314 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவை கடுமையாக தாக்கிய புயல்

மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் நேற்று இரவு ஒரு சூறாவளி வகை 4 அமைப்பாக தீவிரமடைந்தது. கடுமையான வெப்பமண்டல சூறாவளி எரோல் இன்று காலை ப்ரூமிலிருந்து வடமேற்கே...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள தங்க உற்பத்தி

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் தங்க உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக ஆஸ்திரேலியா இன்னும் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின்...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...

சர்வதேச கொலையாளிகளை வேலைக்கு அமர்த்த முயன்ற ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் இருந்து 15 வயது சிறுவன் ஒருவன் வெளிநாடுகளில் இருந்து கொலை ஒப்பந்தத்தைப் பெற முயன்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த குழந்தை டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் கொலைக்...

ஆஸ்திரேலிய காவல்துறை உயர் அதிகாரி திருட்டு வழக்கில் இருந்து விடுவிப்பு

ஒரு சான்று கிடங்கில் இருந்து மதிப்புமிக்க பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை விடுதலை செய்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆடம்பர...