Newsகின்னஸ் சாதனை படைத்த நாய்

கின்னஸ் சாதனை படைத்த நாய்

-

அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த நாய்க்கு 12.7 சென்றிமீற்றர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கு உள்ளது. கால்நடை மருத்துவர் ஒருவர் அந்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது. அதன் நாக்கு 9.49 சென்றிமீற்றர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது.

ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் தெரிவிக்கையில்,

ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம். குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும். அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது.

நாங்கள் ஜோயியை நடைபயிற்சிக்கு அழைத்து செல்லும் போது மக்கள் அதன் அருகில் செல்ல விரும்புவார்கள். நாங்கள் அவர்களை முன்கூட்டியே எச்சரித்து பாதுகாப்பாக அழைத்து செல்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச Pre-Paid வழங்க தயாராக உள்ள Telstra

வாழ்க்கைச் செலவில் அவதிப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்கள் வரை இலவச முன்பணம் செலுத்தும் சேவைகளை வழங்க Telstra நடவடிக்கை எடுத்துள்ளது. Top Up உதவித் திட்டத்தின் கீழ்...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...

உலகில் அதிக TikTok பயனர்களைக் கொண்ட முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான TikTok 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.அதன்படி, ஒரு மாதத்தில் ஒருவர் டிக்டாக்கைப் பயன்படுத்தும் சராசரி...

மெல்பேர்ணில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்

மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக விக்டோரியா அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இலகுரக விமானம், பர்வான்,...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...