Cinemaடைட்டானிக் நடிகர் இந்திய மாடல் அழகியுடன் காதலா?

டைட்டானிக் நடிகர் இந்திய மாடல் அழகியுடன் காதலா?

-

உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் நடித்து முன்னணி ஹாலிவுட் நடிகராக லியோனார்டோ டிகாப்ரியோ உயர்ந்தவர்.

இவருக்கு தற்பொது 48 வயது ஆகிறது. இந்த நிலையில் டிகாப்ரியோவும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாடல் அழகியான 28 வயது நீலம் கில்லும் காதலிப்பதாக இணையதளத்தில் தகவல் பரவியுள்ளது.

இருவரும் லண்டனில் உள்ள சில்டர்ன் பயர் ஹவுஸ் என்ற இடத்தில் ஜோடியாக உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது.

அப்போது டிகாப்ரியோவின் தாயார் இர்மெலின் இண்டன்பிர்கென் மற்றும் நண்பர்கள் சிலரும் உடன் இருந்துள்ளனர். இதை வைத்தே இருவரும் காதலிப்பதாக பேசுகிறார்கள்.

இது தவிர சமீபத்தில் கேன்ஸ் படவிழாவுக்கு தனது கில்லர்ஸ் ஆப் தி பிளவர்ஸ் படத்தை திரையிட டிகாப்ரியோ சென்று இருந்தார்.

அங்கும் டிகாப்ரியோவும், மாடல் அழகி நீலம் கில்லும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. நீலம் கில் 14 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தார்.

பல பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் ஹாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...