Cinemaடைட்டானிக் நடிகர் இந்திய மாடல் அழகியுடன் காதலா?

டைட்டானிக் நடிகர் இந்திய மாடல் அழகியுடன் காதலா?

-

உலக அளவில் புகழ்பெற்ற டைட்டானிக் படத்தில் நடித்து முன்னணி ஹாலிவுட் நடிகராக லியோனார்டோ டிகாப்ரியோ உயர்ந்தவர்.

இவருக்கு தற்பொது 48 வயது ஆகிறது. இந்த நிலையில் டிகாப்ரியோவும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த மாடல் அழகியான 28 வயது நீலம் கில்லும் காதலிப்பதாக இணையதளத்தில் தகவல் பரவியுள்ளது.

இருவரும் லண்டனில் உள்ள சில்டர்ன் பயர் ஹவுஸ் என்ற இடத்தில் ஜோடியாக உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது.

அப்போது டிகாப்ரியோவின் தாயார் இர்மெலின் இண்டன்பிர்கென் மற்றும் நண்பர்கள் சிலரும் உடன் இருந்துள்ளனர். இதை வைத்தே இருவரும் காதலிப்பதாக பேசுகிறார்கள்.

இது தவிர சமீபத்தில் கேன்ஸ் படவிழாவுக்கு தனது கில்லர்ஸ் ஆப் தி பிளவர்ஸ் படத்தை திரையிட டிகாப்ரியோ சென்று இருந்தார்.

அங்கும் டிகாப்ரியோவும், மாடல் அழகி நீலம் கில்லும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. நீலம் கில் 14 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்தார்.

பல பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் ஹாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...