News“நான் நாடு திரும்பி என் தாயை பார்க்க வேண்டும்” - சாந்தன்...

“நான் நாடு திரும்பி என் தாயை பார்க்க வேண்டும்” – சாந்தன் எழுதிய கடிதம்

-

“32 ஆண்டுகளாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை ” என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த டி.சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் நவம்பர் 11, 2022 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் முருகன், ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சாந்தன், சிறப்பு முகாமுக்குள் தனது வாழ்க்கையைப் பற்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதில் சூரிய ஒளி கூட எங்களின் உடலைத் தொடாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தனக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.

அப்போதுதான் தான் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதிய போதிலும் எதுவும் நடக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அடையாளச் சான்றினை புதுப்பித்துக் கொள்ள சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை அணுகியதாகவும். ஆனால் அதற்கும் அவர்களிடம் இருந்து பதில் இல்லை என கூறியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். 120 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சிறப்பு முகாமில் வசிக்கின்றனர்,அவர்களில் 90 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிறப்பு முகாமில் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற பாகுபாடு கிடையாது. “ராஜீவ் காந்தி வழக்கில் விடுவிக்கப்பட்ட நாங்கள் நான்கு பேர், ஜன்னல்கள் தகர தாளால் மூடப்பட்ட அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

மேலும் , “ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஒரு அறையில் இருக்கும்போது, நானும் முருகனும் மற்றொரு அறையைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் எங்கள் அறைகள் ஒன்றுக்கொன்று அருகில் இல்லை. எங்களால் ஒருவரையொருவர் பேசவோ பழகவோ முடியாது.

இரத்த உறவினர்கள் மட்டுமே கைதிகளை சந்திக்க முடியும். “என்னைப் போன்ற ஒரு வெளிநாட்டவருக்கு, இந்தியாவில் இரத்த உறவினரை எப்படி இருக்கும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்களுக்கு அரசு நாள் ஒன்றுக்கு ரூ.175 வழங்கியதாக கூறினார்.

“32 வருடங்களாக நான் என் அம்மாவைப் பார்க்கவில்லை. எனது தந்தையின் கடைசி ஆண்டுகளில் என்னால் அவருடன் இருக்க முடியவில்லை. என் அம்மாவின் கடைசி நாட்களில் அவருடன் இருக்க வேண்டும் என்ற எனது ஆசை “என்று அவர் கடிதத்தில் எழுதினார்.

நன்றி தமிழன்

Latest news

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி 17 வயது சிறுமி மரணம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தின் நீரில் சுறா தாக்கி ஒரு பெண் நீச்சல் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே...

பாக்டீரியா அச்சுறுத்தல் காரணமாக குடிநீரை கொதிக்க வைத்து பருகுமாறு அறிவுறுத்தல்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடற்கரையில் வசிப்பவர்கள் கொதிக்க வைத்த தண்ணீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் குழாய் நீரில் E.coli என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து...

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு மேலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மக்களுக்கு புயல்கள் மற்றும் கனமழைக்கான ஆபத்து தொடர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருவமழை அழுத்தம் தீவிரமாக இருப்பதால், இந்த வாரம் முழுவதும்...