Sportsஇந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு அபராதம்

-

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 2-வது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 ஓவர்களை வீசி முடிக்காமல் இருந்தது. இதேபோல் அவுஸ்திரேலிய அணி 4 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கள நடுவர்கள் வழங்கிய அறிக்கையை அடுத்து ஐ.சி.சி. போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், அவுஸ்திரேலிய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதமாக விதித்தார்.

அத்துடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறிய குற்றத்துக்காக போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளி தண்டனையாகவும் விதிக்கப்பட்டுள்ளது.

2-வது இன்னிங்சில் சுப்மன் கில் 18 ஓட்டங்களில் ஸ்காட் போலன்ட் பந்து வீச்சில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கேமரூன் கிரீன் கையை தரையில் உரசியபடி பிடித்த இந்த சர்ச்சைக்குரிய கேட்ச் சரியானது தான் என்று அறிவித்த 3-வது நடுவரின் முடிவு குறித்து சமூக வலைதளத்தில் சுப்மன் கில் விமர்சனம் செய்ததால் தண்டனைக்குள்ளாகி இருக்கிறார்.

நன்றி தமிழன்

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...