NewsSpider-Man போன்று உயரமான கட்டிடத்தில் ஏறிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Spider-Man போன்று உயரமான கட்டிடத்தில் ஏறிய இளைஞருக்கு நேர்ந்த கதி

-

தென் கொரியாவின் சியோல் நகரில் லோட்டே வேர்ல்ட் டவர் அமைந்துள்ளது. 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகுமாகும்.

இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென இளைஞன் ஒருவர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார்.

கயிறு உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி அவர் ஏறியதைப் பார்த்த சிலர், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த பகுதியில் கூட்டம் கூட ஆரம்பித்ததை தொடர்ந்து பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் அவரை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

அந்த இளைஞன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கட்டிடத்தின் மீது ஏறிய நிலையில், 73வது தளத்தை அடைந்தபோது, அவரை கட்டிடத்திற்குள் வரவழைத்தனர்.

பின்னர் அவர் பொலிஸாரால் அதிரடி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் பிரிட்டனைச் சேர்ந்தவர் எனவும் , பெயர் ஜார்ஜ் கிங் தாம்சன் எனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...