NewsAI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

AI தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கை விடுத்த Google

-

தொழில்நுட்ப உலகின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக ChatGPT தொழில்நுட்பம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கு போட்டியாக சாட்போட், மைக்ரோசாப்ட் என அடுத்தடுத்து நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. கூகுள் நிறுவனம் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.

AI தொழில்நுட்பம் பல தகவல்களை சேமித்து வைத்திருப்பது மட்டுமில்லாமல் பயனர்களுக்கு ஏற்றவாறு அதனை அமைத்து தரக்கூடியது.

ஊழியர்கள் சிலர் இணைந்துதான் ஒரு வெப்சைட் உருவாக்க இயலும் என்ற நிலைமாறி, நாம் AI தொழில்நுட்பம் வாயிலாக இதனை உருவாக்கிக் கொள்ளும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்காக அமைத்தாலும் பல வேலை நீக்கங்களும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் AI தொழில்நுட்பத்திற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி AI தொழில்நுட்பத்தில் நம்பிக்கை மிகுந்த தகவல்களை பரிமாறும்போது அவை வெளியாவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றும், AI வாங்கும் தகவல்களை அது நகலாக வெளியிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் சாட்ஜிபிடி, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் பல பில்லியன் கணக்கில் டாலர்களை AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஊழியர்களை கூகுள் அறிவுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.

உலகில் எண்ணற்ற நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன. சாம்சங், அமேசான், டாட்சே வங்கி போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை சில வரையறைகளுடன் பயன்படுத்தி வருகின்றன.

உலகெங்கிலும் 43 சதவீத பணியாளர்கள் தங்கள் நிறுவனத்திற்கு தெரியாமல் கடந்த ஜனவரி மாதத்தில் சாட்ஜிபிடி மற்றும் இதர ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...