Newsபாகிஸ்தான் சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தான் சிறையில் 17 கைதிகள் தப்பியோட்டம்

-

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கைதிகள் பலர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

ஆனால் கைதிகள் சிலர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தப்பிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி தொழுகை நடைபெற்ற சமயத்தில் சில கைதிகள் சிறையில் இருந்து ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தனர்.

இதனையறிந்த சிறை காவலர்கள் அவர்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் சிறை காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது.

மேலும் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். அவர்கள் தப்பி செல்வதற்கு வெளியில் இருந்து சிலர் உதவி உள்ளனர்.

தப்பி ஓடிய கைதிகளில் சிலர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமன் சிறைச்சாலையானது ஈரான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது.

எனவே நண்பர்களின் உதவியுடன் இவர்கள் அங்கு தப்பி ஓடி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்காக சிறையில் இருந்து தப்பிய கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய முகாம் கட்டணங்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Quobba blowholes-இற்குள் நுழைபவர்களுக்கு புதிய கட்டணங்களை விதிக்க Carnarvon நகர சபை முடிவு செய்துள்ளது. முகாமிடுவதற்கு ஒரு நாளைக்கு $30 செலவாகும் என்றும்...

Operation Sindoor – 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் பலி!

Operation Sindoor குறித்து இராணுவ நடவடிக்கைகளின் தலைமை பணிப்பாளரான லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “Operation Sindoor நடவடிக்கையானது எல்லையில்...

400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ள Woolworths

வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட 400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக Woolworths அறிவித்துள்ளது. புதன்கிழமை முதல் Woolworths, கடைகளிலும் ஆன்லைனிலும்...

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

நியூ சவுத் வேல்ஸ் படகில் கண்டுபிடிக்கப்பட்ட டன் கணக்கிலான கோகோயின்!

நியூ சவுத் வேல்ஸ் கடற்கரையில் ஒரு கப்பலை வழிமறித்து சோதனை செய்த போலீசார், தேடுதல் வேட்டையில் ஐந்து பேரை கைது செய்து, 623 மில்லியன் டாலர்...