Newsவெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு - அமெரிக்காவில் பரபரப்பு

வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்காவில் பரபரப்பு

-

அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பை கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தாக்குதலுக்கான வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

குறித்த சமயத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதையடுத்து உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது.

பின்னர் அந்த மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகெய்ன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...