Articleஅடிக்கடி சூடாகிறதா உங்கள் மொபைல்? - தவிர்க்க புதிய வழிகள் இதோ!

அடிக்கடி சூடாகிறதா உங்கள் மொபைல்? – தவிர்க்க புதிய வழிகள் இதோ!

-

உலகின் முன்னணி செல்போன் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஒரு சில போன்கள் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தான் வெளிவருகின்றன. ஆனாலும் சில சமயங்களில் போன் சூடாவது போன்ற சில சிக்கல்கள் வரும்.

அதாவது ஸ்மார்ட்போன் சூடானால் அது போனின் செயல்பாட்டில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும். பின்பு போனை பயன்படுத்துவதற்கே சிரமமாக இருக்கும். முக்கியமான ஸ்மார்ட்போன் சூடானால் பற்றரியின் ஆயுட்காலம் நிரந்தரமாகக் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகள் தான் நமது ஸ்மார்ட்போனை அதிக சூடாக்குகிறது.

குறிப்பாக ஐபோன் அல்லது எண்ட்ரொய்ட் போன் எந்த வகை போன் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை அனைவருக்கும் பொதுவாக காணப்படும். எனவே முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் ஏன் சூடாகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு நாம் செய்யக்கூடிய தவறுகளை எப்படி தவிர்க்கலாம் என்பதைச் சற்று விரிவாகப் இப்போது பார்க்கலாம்.

சூரிய ஒளி:

ஸமார்ட்போன் வெப்பமடைவதற்கான பொதுவான காரணம் என்னவென்றால், சூரிய ஒளி நேரடியாக ஸ்மார்ட்போனில் படும்படி வைப்பது தான். குறிப்பாக உங்களது போனை சிறிது நேரம் வெயிலில் வைத்தால் கூட போனின் பேட்டரி மற்றும் செயல்திறன் போன்றவற்றில் அதிக பாதிப்புகள் வரும் எனவே சூரிய ஒளி இல்லாத இடத்தில் போனை வைப்பது மிகவும் நல்லது.

ரெம்:

உங்களது போனின் ரெம் (RAM)-இல் அதிக இடத்தை பிடிக்கும் வகையிலான செயலிகளையோ அல்லது கேம்ஸ்களையோ வைத்திருந்தால் கூட போன் வெப்பமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ரெம் அளவைப் பொறுத்து குறைந்த செயலிகளை போன்களில் பயன்படுத்துவது நல்லது. அதிலும் லைட் வெர்ஷன் செயலிகளை போன்களில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

அப்டேட் முக்கியம்:

ஸ்மார்ட்போனை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக உங்களது போனை முதல் முறை அப்டேட் செய்யும் போது கொஞ்சம் சூடாக வாய்ப்பு உள்ளது. ஆனாலும் போனை அப்டேட் செய்தால் சிறந்த செயல்திறன் கிடைக்கும். பின்பு போனில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறையும்.

வைரஸ் தாக்குதல்:

அதிக தரத்தில் உள்ள வீடியோக்களை நீண்ட நேரம் பார்த்தாலும் உங்களது போன் சூடாக வாய்ப்பு உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். பின்பு போனில் வைரஸ் தாக்குதல் அல்லது போலியான செயலிகள் இருந்தால் செயல்திறன் பாதித்து சூடாவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலை:

பொதுவாக ஸ்மார்ட்போனின் வெப்பநிலை 0 முதல் 35 பாகை செல்சியஸ் அளவிற்குள் இருக்க வேண்டும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்கு மேல் உங்களது போன் சூடானால் அதை உடனே சரி செய்யுங்கள். அதேபோல் உங்கள் போன் அடிக்கடி சூடாகும் என்றால், வெயில் காலத்தில் போனில் உள்ள சில அம்சங்களை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதாவது ஜிபிஎஸ், மெப், ட்ராக்கிங் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பேக் கவர்:

உங்களது ஸ்மார்ட்போனுக்கு பேக் கவர் பயன்படுத்தினால், சிறிது நேரத்திற்கு அதை அகற்றுவது நல்லது. அதாவது இதன் மூலம் உங்களது போன் சூடாவது கொஞ்சம் குறையும். அதேபோல் போன் பயன்படுத்தாத நேரத்தில் சில செயலிகள் பேக்ரவுண்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதனால் கூட நமது போன் சூடாக வாய்ப்பு உள்ளது. மேலும் போனில் பேட்டரி சேவ் மோடை எக்டிவேட் செய்து பயன்படுத்துவது நல்லது.

Latest news

ஆஸ்திரேலியாவில் நிலைகொண்டுள்ள வெப்பமண்டல சூறாவளி – 185km வேகத்தில் வீசும் காற்று!

கடுமையான வெப்பமண்டல சூறாவளி Alfred, குயின்ஸ்லாந்து கடற்கரையிலிருந்து தெற்கே நகர்ந்து, மூன்றாம் வகை சூறாவளியாக தீவிரமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4:00 மணியளவில் மெக்கேயிலிருந்து வடகிழக்கே 860...

விக்டோரியா கார் திருடர்கள் பற்றி வெளியான ஒரு ஆச்சரியமான ரகசியம்

விக்டோரியா மாநிலத்தில் 20 வருடங்களாக நடைபெற்று வரும் தொடர் வாகனத் திருட்டுகளில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் ஈடுபட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மாநிலத்தில்...

சாதனை வருவாயை ஈட்டியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம்

கடந்த டிசம்பரில் முடிவடைந்த அரையாண்டு காலத்தில் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் கிட்டத்தட்ட $1.4 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சி இதற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது...

புதுப்பிக்கப்பட உள்ள Virgin Australia –

Virgin Australiaவில் 25 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டு மறுஆய்வு வாரியத்தின் சிறப்பு ஆலோசனையின் பேரில், மத்திய நிதியமைச்சர் ஜிம்...

ஆஸ்திரேலிய கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சாதனம்

நேற்று (27) காலை கோல்ட் கோஸ்ட் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சாதனம் ஒன்று கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பிரதான...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ந்துள்ள தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள்

ஆஸ்திரேலியாவில் தனியார் காப்பீட்டு பிரீமிய விலைகள் சுமார் 3.73 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைபெறும்...