Newsசிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

-

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.

செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தமிழரும், முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். இதற்காக அவர் முறைப்படி பிரச்சாரத்தை தொடங்கினார். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக தர்மன் தன் விருப்பத்தை முதலில் அறிவித்து, ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அதிகாரப்பூர்வ வெளியீடு வந்தது.

கனகரத்தினம் சண்முகரத்தினத்தின் மகனான தர்மன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் அரசு ஊழியராக இருந்தார்.

2001ஆம் ஆண்டில் அரசியலில் களமிறங்கிய தர்மன், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த அமைச்சராகவும், கல்வித்துறைக்கான மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2003ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட தர்மன் 2008ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2011ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக தனது இலாகாவைத் தக்க வைத்துக் கொண்ட தர்மன், பின்னர் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2012க்கு இடையில் மனிதவள அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 9 ஆண்டுகளுக்கு பின் 2015யில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தான் தர்மன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,

‘சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில விதிமுறைகள் மாற்று நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று நான் மிகவும் வலுவாக உணர்ந்ததால், இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அலுவலகத்திற்கான தன் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது ‘ஒரு புதிய சகாப்தத்திற்கான ஜனாதிபதியாக’ இருக்க விரும்புவதாக தர்மன் குறிப்பிட்டார்.

Latest news

வேலை இழக்கும் நூற்றுக்கணக்கான AGL Energy ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான AGL Energy, அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, நவீனமயமாக்கி, எரிசக்தி திட்டங்களுக்கு மாறத் தயாராகி வருகிறது. இதன்...

NSW ரயில்களில் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்ல அபராதம்

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வலையமைப்பில் (சிட்னி ரயில்கள், NSW ரயில் இணைப்பு, மெட்ரோ) மாற்றப்பட்ட மின்-பைக்குகளின் பயன்பாடு இன்று முதல் முற்றிலும் தடைசெய்யப்படும் . இந்தச்...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...

இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோனாஷ் பல்கலைக்கழகம்

RP-Sanjiv Goenka குழுமத்தின் ஒரு பகுதியான மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும்  Firstsource Solutions Limited ஆகியவை புதிய செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்குவதற்கான...