Newsசிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

-

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.

செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தமிழரும், முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். இதற்காக அவர் முறைப்படி பிரச்சாரத்தை தொடங்கினார். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக தர்மன் தன் விருப்பத்தை முதலில் அறிவித்து, ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அதிகாரப்பூர்வ வெளியீடு வந்தது.

கனகரத்தினம் சண்முகரத்தினத்தின் மகனான தர்மன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் அரசு ஊழியராக இருந்தார்.

2001ஆம் ஆண்டில் அரசியலில் களமிறங்கிய தர்மன், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த அமைச்சராகவும், கல்வித்துறைக்கான மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2003ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட தர்மன் 2008ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2011ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக தனது இலாகாவைத் தக்க வைத்துக் கொண்ட தர்மன், பின்னர் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2012க்கு இடையில் மனிதவள அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 9 ஆண்டுகளுக்கு பின் 2015யில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தான் தர்மன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,

‘சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில விதிமுறைகள் மாற்று நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று நான் மிகவும் வலுவாக உணர்ந்ததால், இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அலுவலகத்திற்கான தன் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது ‘ஒரு புதிய சகாப்தத்திற்கான ஜனாதிபதியாக’ இருக்க விரும்புவதாக தர்மன் குறிப்பிட்டார்.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்

இந்த ஆண்டு விக்டோரியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. விக்டோரியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து பறவைக் காய்ச்சலின் மூன்றாவது வழக்கு பதிவானதைத்...

ஆஸ்திரேலியாவில் போக்கர் இயந்திரத்தால் 8 பில்லியன் டாலர்கள் இழப்பு

சூதாட்டத்தால் மக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மதுபானம் மற்றும் கேமிங் தரவுகள், அந்த மாநிலத்தில்...

விக்டோரியாவில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்குவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் காவல்துறைத் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து தனது பதவியை...

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி

இந்தியாவில் ஒரு அரசியல்வாதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முகமூடி அணிந்த ஒரு குழு, காங்கிரஸ் எம்.பி. ரீ ரகிபுல் உசேன்...

மெல்பேர்ண் பள்ளிக்கு எழுந்துள்ள AI நெருக்கடி

மெல்பேர்ண் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆபாசப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. கிளாட்ஸ்டோன் பார்க் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப்...

ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்திற்கு மில்லியன் டாலர்கள் அபராதம்

ஆஸ்திரேலிய சூப்பர் பைனான்சியல் நிறுவனத்திற்கு $27 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Australian Super Fund ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். மேலும் இது உலகின் 16வது...