Newsசிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழர்

-

சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்கினார்.

செப்டம்பர் 23ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் தமிழரும், முன்னாள் அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிடுகிறார். இதற்காக அவர் முறைப்படி பிரச்சாரத்தை தொடங்கினார். ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக தர்மன் தன் விருப்பத்தை முதலில் அறிவித்து, ஒரு மாதத்திற்கு பிறகு இந்த அதிகாரப்பூர்வ வெளியீடு வந்தது.

கனகரத்தினம் சண்முகரத்தினத்தின் மகனான தர்மன், சிங்கப்பூர் நாணய ஆணையத்தில் ஒரு பொருளாதார நிபுணர் மற்றும் அரசு ஊழியராக இருந்தார்.

2001ஆம் ஆண்டில் அரசியலில் களமிறங்கிய தர்மன், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான மூத்த அமைச்சராகவும், கல்வித்துறைக்கான மூத்த அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

2003ஆம் ஆண்டில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட தர்மன் 2008ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 2011ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, நிதி அமைச்சராக தனது இலாகாவைத் தக்க வைத்துக் கொண்ட தர்மன், பின்னர் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து 2011 மற்றும் 2012க்கு இடையில் மனிதவள அமைச்சராகவும் பணியாற்றிய அவர், 9 ஆண்டுகளுக்கு பின் 2015யில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தான் தர்மன் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,

‘சிங்கப்பூர் கலாச்சாரம், நமது சில விதிமுறைகள் மாற்று நாம் ஒருவருக்கொருவர் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என்று நான் மிகவும் வலுவாக உணர்ந்ததால், இந்த பந்தயத்தில் அடியெடுத்து வைத்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அலுவலகத்திற்கான தன் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது ‘ஒரு புதிய சகாப்தத்திற்கான ஜனாதிபதியாக’ இருக்க விரும்புவதாக தர்மன் குறிப்பிட்டார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...