Newsஐபோன் 15 சீரிஸ் வெளியீட்டு திகதி அறிவிப்பு

ஐபோன் 15 சீரிஸ் வெளியீட்டு திகதி அறிவிப்பு

-

Apple நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் 15 சீரிஸ் மொடல்களை அறிமுகம் செய்ய இருப்பது அனைவரும் அறிந்ததே. எனினும், அந்நிறுவனம் சார்பில் இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஐபோன் 15 சீரிஸ் மொடல்கள், அவற்றின் அம்சங்கள் மற்றும் ரெண்டர்கள் என ஏராளமான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வந்துள்ளன.

அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 15 சீரிஸ் மொடல்களின் வெளியீட்டு திகதி பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்க தொலைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை செப்டம்பர் 13-ம் திகதி விடுமுறை எடுக்க கேட்டுக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதே நாளில் முக்கிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த திகதியில் எந்த மொடல் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், Apple நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இதே காலக்கட்டத்தில் தனது புதிய ஐபோன் மொடல்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த திகதியிலேயே ஐபோன் 15 சிரிஸ் மொடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மொடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. நான்கு மொடல்களும் அதன் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட வடிவ மாற்றங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Latest news

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை...

உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

மனித தூக்கம் தொடர்பாக ஒரு அமெரிக்க ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வின்படி, அந்த தரவரிசையில் 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அகோலா உள்ளது,...

39 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் ஆஸ்திரேலியர்களின் விருப்பமான பயண இலக்கு

ஆஸ்திரேலியர்கள் பார்வையிட மிகவும் பிரபலமான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் பணியகம் சமீபத்தில் அறிக்கையை...

வீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை விக்டோரியாவை விட 5 மாநிலங்கள் முன்னிலை

ஆஸ்திரேலியர்களின் வீட்டுச் செலவு மேலும் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் 4 முக்கிய வகைகளின் கீழ் அவுஸ்திரேலியர்களின் உள்நாட்டுச் செலவு அதிகரித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி,...

விக்டோரியன் குடும்பங்களுக்கு $400 மானியம் வழங்க முடிவு

2024ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 700,000 ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு...

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் என்னென்ன தெரியுமா?

ஹார்வர்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வின்படி, தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால், டிமென்ஷியாவால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த ஆய்வு 28 வயதுக்கு மேற்பட்ட 92,000...