விக்டோரியா மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நகர சபைகள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை தவிர்த்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
44 மாநகர சபைகளையும் கருத்தில் கொண்டால், வழங்கப்பட்ட சலுகைப் பணத்தின் சதவீதம் 0.01 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த நிதியாண்டில் விக்டோரியா மாநில அரசு வரி உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம் ஈட்டிய வருமானம் 3.1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறான வருமானத்தைப் பெற்றுக் கொண்டாலும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் மக்களுக்கு எந்தவிதமான நிவாரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமை வருத்தமளிப்பதாக சிவில் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு மாநகர சபை சட்டத்தின் கீழ் போதிய ஏற்பாடுகள் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





