Newsதிருமண நிகழ்விற்குள் நுழைந்த கரடி - ஏற்பட்ட பரபரப்பு

திருமண நிகழ்விற்குள் நுழைந்த கரடி – ஏற்பட்ட பரபரப்பு

-

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் இடம்பெற்றது.

இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர்.

அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்திற்குள் கரடி புகுந்து விட்டது. இதைப்பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அங்கும் இங்குமாக ஓடி தப்பிய நிலையில் கரடி நேராக அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.

பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்டியுள்ளனர். அதிர்ஷ்ட வசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நன்றி தமிழன்

Latest news

எடை இழப்பு மருந்துகளை நிறுத்திய பிறகு என்ன நடக்கும்?

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகிவிட்ட எடை இழப்பு மருந்துகளின் பயன்பாடு குறித்த புதிய ஆய்வை பிரிட்டிஷ் மருத்துவ இதழ் (BMJ) வெளியிட்டுள்ளது. இந்த மருந்துகளின் பயன்பாட்டை நிறுத்திய...

வட கரோலினாவில் பிரபல நீச்சல் தலத்திற்கு அருகில் மிகப்பெரிய முதலை கண்டுபிடிப்பு

மழைக்காலத்தின் உச்சத்தில் வடக்குப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபலமான நீச்சல் இடத்திற்கு அருகில் 4.9 மீட்டர் உயரமுள்ள முதலை ஒன்று காணப்பட்டுள்ளது. டார்வினுக்கு தெற்கே சுமார் 150...

குயின்ஸ்லாந்தில் கோர விபத்து – இரு குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையின் ஒரு...

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

குயின்ஸ்லாந்தில் கோர விபத்து – இரு குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையின் ஒரு...

39-க்கும் அதிகமான நாடுகளில் ‘ஜன நாயகன்’ வெளியிட தடை

நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் எதிர்வரும் 9ஆம் திகதி வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச்....