News திருமண நிகழ்விற்குள் நுழைந்த கரடி - ஏற்பட்ட பரபரப்பு

திருமண நிகழ்விற்குள் நுழைந்த கரடி – ஏற்பட்ட பரபரப்பு

-

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் இடம்பெற்றது.

இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர்.

அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமண நிகழ்ச்சியில் நடைபெறும் இடத்திற்குள் கரடி புகுந்து விட்டது. இதைப்பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் அங்கும் இங்குமாக ஓடி தப்பிய நிலையில் கரடி நேராக அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.

பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்டியுள்ளனர். அதிர்ஷ்ட வசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நன்றி தமிழன்

Latest news

NO முகாமின் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

பூர்வீக குரல் வாக்கெடுப்பு முன்மொழிவுக்கு எதிராக NO முகாமை ஆதரிக்கும் மக்கள் இன்று ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவிட் விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை

கோவிட் தொற்றுநோய் பருவம் தொடர்பான விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின்...

மெல்போர்ன் துறைமுகத்தில் கப்பலொன்றில் 200 கிலோவுக்கும் அதிகமான கோகோயின்

மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் 200 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 80...

குயின்ஸ்லாந்து சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் தடுப்பூசியை அடுத்த வாரத்திலிருந்து கட்டாயமாக்க வேண்டும்

குயின்ஸ்லாந்தில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய கோவிட் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் நீக்கப்பட்டுள்ளது. 2 வார கால...

பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் 72% ஆஸ்திரேலியர்கள்

பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் விமான நிலையம் மற்றும் தொடர்புடைய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சிட்னி வாசிகளுக்கு...

80% ஆஸ்திரேலியர்கள் வீட்டுக் கனவைக் கைவிட்டனர்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே தங்களுக்கென வீடு வாங்கும் திறன் இல்லாமல் போய்விட்டதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று கண்டறிந்துள்ளது.