Newsபுதிய ஐபோனை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள ஆப்பிள் நிறுவனம்

புதிய ஐபோனை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள ஆப்பிள் நிறுவனம்

-

ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப்புது ஆப்பிள் சாதனங்களை வியக்கத்தகு அம்சங்களுடன் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இம்மாதம் புதிய ஐபோன்களையும், ஆப்பிள் கைக்கடிகாரங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி செப்டம்பர் 12ம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் வகை தொலைபேசிகள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் வகைகளில் ஏ17 பயோனிக்(A-17 bionic) சிப்செட் இடம்பெற்றுள்ளதாகவும், ஐஓஎஸ் 17 (ios 17) இயங்குதளத்தில் இந்த வகைகள் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொலைபேசிகள் ஆப்பிளின் நிகழ்வில் அறிமுகமாகிறது. டைப்-சி (type-c) சார்ஜிங் போர்ட் இந்த சாதனங்களில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோடு ஆப்பிள் கைக்கடிகாரம் சீரிஸ் 9, ஆப்பிள் கைக்கடிகாரம் அல்ட்ரா 2 மற்றும் ஐஓஎஸ் இயங்குதள அப்டேட் இந்த நிகழ்வில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தொழிநுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...