Newsபுதிய ஐபோனை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள ஆப்பிள் நிறுவனம்

புதிய ஐபோனை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள ஆப்பிள் நிறுவனம்

-

ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப்புது ஆப்பிள் சாதனங்களை வியக்கத்தகு அம்சங்களுடன் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இம்மாதம் புதிய ஐபோன்களையும், ஆப்பிள் கைக்கடிகாரங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி செப்டம்பர் 12ம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் வகை தொலைபேசிகள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் வகைகளில் ஏ17 பயோனிக்(A-17 bionic) சிப்செட் இடம்பெற்றுள்ளதாகவும், ஐஓஎஸ் 17 (ios 17) இயங்குதளத்தில் இந்த வகைகள் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொலைபேசிகள் ஆப்பிளின் நிகழ்வில் அறிமுகமாகிறது. டைப்-சி (type-c) சார்ஜிங் போர்ட் இந்த சாதனங்களில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோடு ஆப்பிள் கைக்கடிகாரம் சீரிஸ் 9, ஆப்பிள் கைக்கடிகாரம் அல்ட்ரா 2 மற்றும் ஐஓஎஸ் இயங்குதள அப்டேட் இந்த நிகழ்வில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தொழிநுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...