Newsபுதிய ஐபோனை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள ஆப்பிள் நிறுவனம்

புதிய ஐபோனை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள ஆப்பிள் நிறுவனம்

-

ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப்புது ஆப்பிள் சாதனங்களை வியக்கத்தகு அம்சங்களுடன் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இம்மாதம் புதிய ஐபோன்களையும், ஆப்பிள் கைக்கடிகாரங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி செப்டம்பர் 12ம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் வகை தொலைபேசிகள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் வகைகளில் ஏ17 பயோனிக்(A-17 bionic) சிப்செட் இடம்பெற்றுள்ளதாகவும், ஐஓஎஸ் 17 (ios 17) இயங்குதளத்தில் இந்த வகைகள் இயங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தொலைபேசிகள் ஆப்பிளின் நிகழ்வில் அறிமுகமாகிறது. டைப்-சி (type-c) சார்ஜிங் போர்ட் இந்த சாதனங்களில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தோடு ஆப்பிள் கைக்கடிகாரம் சீரிஸ் 9, ஆப்பிள் கைக்கடிகாரம் அல்ட்ரா 2 மற்றும் ஐஓஎஸ் இயங்குதள அப்டேட் இந்த நிகழ்வில் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தொழிநுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளை காப்பாற்ற மற்றொரு முயற்சி

நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா பிரச்சாரம், சமூக ஊடகங்களின் அச்சுறுத்தலில் இருந்து ஆஸ்திரேலியாவின் குழந்தைகளைக் காப்பாற்ற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் ஆன்லைன் மனுவில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா...

அதிவேக ஆம்புலன்ஸ் சேவை கொண்ட மாநிலங்களின் பட்டியல் இதோ!

ஆஸ்திரேலியா மாநிலங்களில் அவசர அழைப்புகளுக்கு விரைவாக பதிலளிக்கும் ஆம்புலன்ஸ் சேவை பற்றிய சமீபத்திய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தெற்கு ஆஸ்திரேலிய ஆம்புலன்ஸ் சேவை...

விக்டோரியாவின் மக்கள் தொகை பற்றி வெளியான புதிய தகவல்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளரும் மாநிலமாக விக்டோரியா அடையாளம் காணப்பட்டுள்ளது. 2022-2023 நிதியாண்டிற்கான புள்ளியியல் தரவுகளின்படி, மெல்போர்னின் மக்கள்தொகை 3.3 சதவீதம் அதிகரித்துள்ளது, இது விக்டோரியாவின் மற்ற பகுதிகளுடன்...

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்கானவரின் தாயார் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள்

போண்டாய் சந்தியில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் தாயொருவர் அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபரைப் போன்ற மனநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல நிதி மற்றும்...

கைது செய்யப்பட்ட மெல்போர்னில் போராட்டக்காரர்கள்

மெல்போர்னின் CBD இல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆதரவு போராட்ட குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தனித்தனி கூட்டங்களிலும் சுமார்...